வட மாகாண பாடசாலைகளில் கல்வியில் முறைகேடு?

கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு முரணாகவும், முறையான அனுமதிகள் இன்றியும் வட மாகாண பாடசாலைகளில் தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகளை நடத்தும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூல முறைப்பாடு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் 2025.11.11 ஆம் திகதிய ED/09/12/02/02/05(I) இலக்க கடிதத்திற்கு முரணாக, அரச வளங்களையும் அரச கரும நேரத்தையும் தவறாகப் பயன்படுத்தி, அரச சார்பற்ற நிறுவனமான தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்திற்கு நிதியை வழங்கியமை குறித்தும் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலாப நோக்கோடு செயற்படும் அரச சார்பற்ற நிறுவனம் அரச சார்பற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டைமானாறு வெளிக்கள நிலையம், தனது ஆரம்பகால நோக்கங்களிலிருந்து விலகி, தற்போது பரீட்சைகள் மூலம் இலாபம் ஈட்டும் நோக்கில் செயற்பட்டு வருவதாக ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் செயற்பாடுகளைப் பாடசாலைகளுக்குள் கட்டுப்படுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, வட மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வித் திணைக்களம் என்பன இணக்கப்பாடு வெளியிட்டிருந்த போதிலும், அந்த இணக்கப்பாடுகள் மீறப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண கல்விப் பணிப்பாளரின் உத்தரவு மீறல் வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாடசாலைகள் இயங்காததால், தரம் 12 (2027 Batch) மாணவர்களுக்கான முதலாம் தவணைப் பரீட்சையைப் பாடசாலை மட்டத்தில் நடத்தி மதிப்பீடு செய்யுமாறு வட மாகாண கல்விப் பணிப்பாளர் கடந்த 2025.12.31 அன்று (கடித இலக்கம் NP/20/ED/Thirteen/01/2025) அறிவுறுத்தியிருந்தார்.

இருப்பினும், சில பாடசாலை அதிபர்கள் இந்த அறிவுறுத்தலை மீறி, தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்திடம் பணம் செலுத்தி வினாத்தாள்களைப் பெற்று, பாடசாலை நேரத்தில் அந்த நிலையத்தின் நேர அட்டவணைக்கு அமையப் பரீட்சைகளை நடத்தி வருவதாக ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது சட்டவிரோதமான செயற்பாடு எனவும் அரச வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிகாரிகள் மீதான சந்தேகம் கடந்த 2024 ஆம் ஆண்டு யா/மானிப்பாய் மகளிர் கல்லூரியில் இவ்வாறான பரீட்சை நடைபெற்றபோது, ஆசிரியர் சங்கத்தின் முறைப்பாட்டையடுத்து வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரால் அது நிறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், இன்றும் அதே முறைகேடுகள் தொடர்வதாகவும், இதனை வட மாகாண கல்வி அதிகாரிகள் கட்டுப்படுத்தாமல் இருப்பது அவர்கள் மீதான பாரிய அதிருப்தியையும், அதிகாரிகள் இந்த இலாப நோக்கம் கொண்ட நிறுவனத்தின் மூலம் நன்மையடைகிறார்களோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அனுமதியின்றி அரச வளங்களைப் பயன்படுத்தி, முறைகேடான விதத்தில் பரீட்சைகளை நடத்தும் அதிபர்கள் குறித்தும், அரச சார்பற்ற நிறுவனத்திற்கு நிதி வழங்கியமை குறித்தும் விரிவான விசாரணை நடத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு