ஓஷாவாவின் தெற்குப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் டர்ஹாம் பிராந்திய போலீஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்தச் சம்பவத்தில் 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
அப்பகுதியில் ஏற்பட்ட மோதலில், ஒரு போலீஸ் அதிகாரி தனது துப்பாக்கியால் பலமுறை சுட்டார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் அங்கிருந்த மற்றொரு போலீஸ் அதிகாரியும், அந்தச் சந்தேக நபரும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தனர்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், சந்தேக நபரிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என்றும், அவர் கத்தி மட்டுமே வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
பலத்த காயமடைந்த போலீஸ் அதிகாரி டொராண்டோவில் உள்ள அதிதீவிர சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.