யாழ். அரச அதிபருக்கும் வடபிராந்திய கடற்படைத் தளபதிக்குமிடையே விசேட கலந்துரையாடல்!

வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் பி. லியனஹமகேவின் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை (10) காங்கேசன்துறை கடற்படை அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் திரு. குரூஸ், பிரதேச செயலாளர்கள், கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலில், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, கடல்வழியால் மேற்கொள்ளப்படும் கடத்தல், காணி விடுவிப்பு, வட தாரகை கப்பல் திருத்தம், எழுதாரகை கப்பலை பயன்பாட்டிற்கு கொண்டுவருதல், கடற்கரை தூய்மைப்படுத்தல், திண்மக்கழிவு பொறிமுறை, கடற்கரை வீதி புனரமைப்பு உள்ளிட்ட மிக முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் :

1.இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுவருவதாகவும், கடற்படை தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும், அத்துமீறலை கட்டுப்படுத்த பொறிமுறை உருவாக்கப்படும் எனவும் வடபிராந்திய கடற்படைத் தளபதி தெரிவித்ததுடன், கடல்வழியாக கடத்தப்படும் போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

2.கடற்படையின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளில் விடுவிக்கப்படும் எனவும், தேவையான காணிகள் முறையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

3.குறிகட்டுவான் இறங்கு துறையின் மூலம் இலகுவான போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்ற மாவட்டச் செயலகம், கடற்படை, பிரதேச செயலகம் பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன ஒன்றிணைந்து செயற்படுவது எனவும் பொருத்தமாகவிருக்கும் எனவும் கலந்துரையாடப்பட்டது.

4.நயினாதீவு உள்ளிட்ட தீவுப்பகுதிக்கான செல்லும் படகுகளின் தரச்சான்றிதழ் இல்லை என அரசாங்க அதிபரால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், தரச்சான்றிதழை பெற்றுக்கொள்ள பெரும் நிதி செலவு படகுகளின் உரிமையாளர்களுக்கு செலுத்த முடியாத நிலையிருப்பதால் பாதிகாப்பு அமைச்சின் கவனத்திற்கு கடிதம் எழுதி ஒழுங்கான முறைக்கு கொண்டுவர அமைச்சின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

5.கடல் பயணத்தில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்ட போது இன்றைய தினம் நெடுந்தீவில் துரதிஷ்டமாக ஏற்பட்ட இறப்பு தொடர்பாக கருத்து பரிமாறப்பட்டு அகவலை தெரிவிக்கப்பட்டது.

6.மயிலிட்டி இறங்குதுறையிலிருக்கும் அத்துமீறிய இந்திய மீனவர்களின் படகுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

7.எழுதாரகை படகை திருத்தி கொடுக்கப்படும் பட்சத்தில் அதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பேடுக்க கூடியதாகவிருக்கும் என தெரிவிக்கப்பட்ட போது அதனைத் திருத்த பாரிய நிதி செலவு ஏற்படும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

as

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

December 12, 2025

வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

photo-collage.png (14)

நாவலர் குருபூஜை நிகழ்வு

December 12, 2025

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதன்கிழமை (10) அன்று நாவலர் குருபூஜை இடம்பெற்றது. கலாசாலை ரதிலஷ்மி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன்

quin

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது தென் ஆபிரிக்கா

December 12, 2025

இந்தியாவுக்கு எதிராக நியூ சண்டிகார் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட்

new

வெற்றியை பதிவு செய்தது நியூஸிலாந்து

December 12, 2025

வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (12) நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜேக்கப் டபியின் துல்லியமான

lau

கியூபெக் மாகாணத்தில் பொலிஸ் அதிகாரியால் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்; விசாரணை நடத்த கோரிக்கை

December 12, 2025

கியூபெக் மாகாணத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15 வயதுச் சிறுவன் நூரான் ரெஸாயி (Nooran Rezayi) பொலிஸ் அதிகாரியால் சுட்டுக்

new

ஒட்டாவா நியூ டான் மெடிக்கல் கிளினிக் மீது விசாரணை!

December 12, 2025

ஒட்டாவாவின் சைனாடவுன் (Chinatown) பகுதியில் இயங்கி வரும் நியூ டான் மெடிக்கல் கிளினிக் (New Dawn Medical Clinic) என்ற

mic ma

கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து விலகி ஆளும் லிபரல் கட்சியில் மைக்கேல் மா?

December 12, 2025

கனடா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் (MP) மைக்கேல் மா (Michael Ma)

wfk

உலக கராத்தே சம்மேளனம் புதிய சின்னத’தை வெளியிட்டது

December 12, 2025

உலக கராத்தே சம்மேளனம் புதிய சின்னத்தினை (Logo) புதன்கிழமை (10) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக தேசிய கராத்தே தெரிவுக்குழுவின் தலைவர் அன்ரோ

vyv

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: இந்தியா 234 ஓட்டங்களால் வெற்றி

December 12, 2025

துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற ஏ குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆசிய கிண்ண

mer

முன்னாள் அமைச்சர் மேர்வினுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

December 12, 2025

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, மேலதிக சாட்சி விசாரணைக்காக ஜனவரி

d

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640ஆக அதிகரிப்பு

December 12, 2025

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஊடாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640ஆக அதிகரித்துள்ளது. மேலும், 211 பேரை இதுவரை

mansar

மண்சரிவு அபாய வலயமாக இலங்கையின் 30% நிலப்பரப்பு

December 12, 2025

இலங்கையில் தற்போது 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல்