யாழில் இளைஞர், யுவதிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வாய்ப்புகள்!

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை குறித்து வட மாகாணத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட வேலைத்திட்டம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் நேற்றைய தினம் (19) வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வெத்தன்சிங்கன், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் W.W.S. மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுனில் ஜயரத்ன, பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

எதிர்காலத்தில் உலகளாவிய ரீதியில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்படவுள்ள துரித வளர்ச்சிக்குத் தேவையான மனித வளத்தைத் தயார் செய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் மூலம் பாடசாலை மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கு இத்துறை சார்ந்த கோட்பாடு மற்றும் நடைமுறை ரீதியான தெளிவை வழங்குவதே பிரதான நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் விமானப் போக்குவரத்து சங்கங்களை நிறுவுதல், விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துதல், விமான நிலையச் செயற்பாடுகள் குறித்த களப்பயணங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்குதல் போன்ற பல முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அனுர கருணாதிலக, சமூகத்தில் பலருக்கு விமானப் பொறியியலாளராகவோ அல்லது விமானியாகவோ வரவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதற்கான சரியான வழிமுறை குறித்து போதிய தெளிவு இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.

தற்போது தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை விமானப் பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கேள்வி அதிகரித்துள்ள போதிலும், அத்துறையில் போதிய ஆட்கள் இல்லாத நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, எமது இளைஞர் சமூகத்தை இலங்கைக்கு மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியில் இத்துறை சார்ந்த சேவைகளை வழங்கக்கூடிய தகுதியுள்ளவர்களாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) தரவுகளின்படி, அடுத்த பத்து ஆண்டுகளில் இத்துறை மூன்று மடங்கு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குத் தேவையான தகுதியுள்ள நபர்களை உருவாக்க விமானப் போக்குவரத்து கல்வி நிறுவனங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சுனில் ஜயரத்ன உரையாற்றுகையில், புதிய அரசாங்கத்தின் கொள்கைகளால் சர்வதேச ரீதியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக புதிய விமான நிறுவனங்கள் நாட்டிற்கு வருகை தருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், வட மாகாணத்தில் இத்துறையை அபிவிருத்தி செய்ய முன்வருமாறு முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்ததுடன், வட மாகாணத்தில் உள்ள வளங்களை உச்சகட்டமாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய

de

கிளங்கன் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு!

March 3, 2026

டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால்

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்