கொழும்பிலிருந்து தெஹியத்தகண்டிய நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து புதன்கிழமை (14) இரவு 11.30 மணியளவில் திம்புலாகல பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும், ஓட்டுநர் சிறு காயங்களுடன் மனம்பிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மனம்பிடிய பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மனம்பிடிய பொலிஸார், வீதியைக் கடக்கும் காட்டு யானையைக் காப்பாற்றுவதற்காக பேருந்தை வீதியை விட்டு நகர்த்த வேண்டியிருந்ததாக சாரதியும் நடத்துனரும் பொலிஸாரிடம் தெரிவித்ததாகத் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மனம்பிடிய பொலிஸார், விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சாரதியும் நடத்துனரும் உட்பட மேலும் மூன்று பயணிகள் மட்டுமே இருந்ததாகத் தெரிவித்தனர்.