மேற்கு இந்தியத் தீவுகள் 4 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்!

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான கடைசி மற்​றும் 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 518 ரன்​கள் குவித்து முதல் இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​தது. கேப்​டன் ஷுப்​மன் கில் சதம் விளாசி​னார்.

டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 90 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 318 ரன்​கள் குவித்​தது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 173, ஷுப்​மன் கில் 20 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை இந்​திய அணி தொடர்ந்து விளை​யாடியது. 2-வது ஓவரிலேயே ஜெய்​ஸ்​வால் ரன் அவுட் ஆனார். ஜெய்​டன் சீல்ஸ் வீசிய பந்தை ஜெய்​ஸ்​வால் மிட் ஆஃப் திசை​யில் தட்​டி​விட்டு விரை​வாக ரன்​ எடுக்க ஓடி​னார். ஆனால் பந்து டேக்​நரைன் சந்​தர்​பால் கைகளுக்கு சென்ற நிலை​யில் ஷுப்​மன் கில் ரன் ஓட வேண்​டாம் என கைகாட்​டி​னார். ஆனால் அதற்​குள் ஜெய்​ஸ்​வால் ஆடு​களத்​தின் பாதி பகு​தியை கடந்​து​விட்​டார்.

இதன் பின்​னர் ஜெய்​ஸ்​வால் திரும்பி கிரீஸை நோக்கி ஓடி​னார். ஆனால் அதற்குள் டேக்​நரைன் சந்​தர்​பால் பந்தை த்ரோ செய்ய அதை பிடித்து விக்​கெட் கீப்​பர் டெவின் இம்​லாக் ஸ்டெம்பை தகர்க்க ஜெய்​ஸ்​வால் வேதனை​யுடன் பெவிலியன் திரும்​பி​னார். 258 பந்​துகளை சந்​தித்த ஜெய்​ஸ்​வால் 22 பவுண்​டரி​களு​டன் 175 ரன்​கள் எடுத்​தார். 3-வது விக்​கெட்​டுக்கு ஷுப்​மன் கில்​லுடன் இணைந்து 74 ரன்​கள் சேர்த்​தார்.

இதையடுத்து களமிறங்​கிய நித்​திஷ் குமார் ரெட்டி மட்​டையை சுழற்​றி​னார். அதிரடி​யாக விளை​யாடிய அவர், 54 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 43 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோமல் வாரிக்​கன் பந்தை சிக்​ஸருக்கு விளாச முயன்ற போது எல்​லைக்​கோட்​டுக்கு அருகே ஜெய்​டன் சீல்​ஸிடம் கேட்ச் ஆனது. இதன் பின்​னர் களமிறங்​கிய விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான துருவ் ஜூரெலும் அதிரடி​யாக விளை​யாடி​னார்.

மறு​புறம் நிலை​யான ஆட்​டத்தை வெளிப்​படுத்​திய ஷுப்​மன் கில் 177 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 13 பவுண்​டரி​களு​டன் தனது 10-வது சதத்தை விளாசி​னார். மட்​டையை சுழற்​றிய துருவ் ஜூரெல் 79 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 44 ரன்​கள் எடுத்த நிலை​யில் ராஸ்​டன் சேஸ் பந்​தில் போல்​டா​னார். அப்​போது இந்​திய அணி 134.2 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 518 ரன்​கள் குவித்​திருந்​தது. அத்​துடன் முதல் இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​வ​தாக இந்​திய அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் அறி​வித்​தார்.

ஷுப்​மன் கில் 196 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 16 பவுண்​டரி​களு​டன் 129 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் தரப்​பில் ஜோமல் வாரிக்​கன் 3 விக்​கெட்​களை​யும், ராஸ்​டன் சேஸ் ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர். இதையடுத்து பேட்​டிங் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 43 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 140 ரன்​கள் எடுத்​தது. ஜான் கேம்​பல் 10, டேக்​நரைன் சந்​தர்​பால் 34, கேப்​டன் ராஸ்​டன் சேஸ் 0 ரன்​களில் ஜடேஜா பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

சற்று தாக்​குப்​பிடித்து விளை​யாடிய அலிக் அதானஸ் 84 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 41 ரன்​கள் எடுத்த நிலை​யில் குல்​தீப் யாதவ் பந்​தில் குல்​தீப் யாதவ் பந்​தில் மிட்விக்​கெட் திசை​யில் நின்ற ஜடேஜா​விடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். ஷாய் ஹோப் 31 ரன்​களும், டெவின் இம்​லாக் 14 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். இன்​று 3-வது நாள்​ ஆட்​டம் நடைபெறுகிறது.

tab

மருந்துகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை – வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம

November 18, 2025

சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் சுமார் 350

wea

தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது…

November 18, 2025

இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து

senthoora

புத்தர் சிலை விவகாரம்; திருகோணமலையில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் திட்டமிட்டவை – இராவண சேனா தலைவர்

November 18, 2025

திருகோணமலையில் நடைபெறும் அசம்பாவிதங்கள் பல தரப்புக்களால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது என இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன் தெரிவித்தார். திருகோணமலை

boa

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவு

November 18, 2025

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை

mav

கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்

November 18, 2025

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்த வாரம் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அங்கு சிரமதானப்

Death-2

துப்பாக்கிச் சூட்டில்; படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு

November 18, 2025

மீட்டியாகொடவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இன்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 45 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை

v

வனவளத் திணைக்களம் பயிர் நிலங்களை சேதப்படுத்துகின்றது!

November 18, 2025

வவுனியா, கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியில் மக்களின் நெற்காணிகளை வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதுடன்,நெற்பயிரை சேதப்படுத்தி தேக்கு மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு

ar

புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி வந்த லொறி தடம்புரண்டு விபத்து

November 18, 2025

வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகனம், ஜங்கன்குளம் பகுதியில் உள்ள வளைவில்

cha

பொதுநலவாய சதுரங்கப் போட்டி; இலங்கைக்கு 09 பதக்கங்கள்

November 18, 2025

மலேசியாவில் நடைபெற்ற பொதுநலவாய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணி 09 பதக்கங்களை வென்றுள்ளது. அதற்கமைய, 03 தங்கப்

ey

இலங்கையில் பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்

November 18, 2025

உலகின் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்கி

aa

ஏஎவ்சி ஆசிய கிண்ண 2ஆம் கட்ட கால்பந்தாட்டப் போட்டி

November 18, 2025

தாய்லாந்துக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெறவுள்ள ஏஎவ்சி ஆசிய கிண்ண 3ஆம் சுற்று தகுதிகாண் 2ஆம் கட்ட (2nd

tam

நாளை இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியை சந்திக்கிறது!

November 18, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) பிற்பகல் ஒருமணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான