மெல்போர்ன் ‘டி-20’ போட்டிஎளிதாக வென்றது ஆஸ்திரேலியா

மெல்போர்ன் ‘டி-20’ போட்டியில் இந்திய பேட்டர்கள் கைவிட, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. அபிஷேக் 68 ரன் எடுத்து ஆறுதல் தந்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இரண்டாவது போட்டி நேற்று மெல்போர்னில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்சல் மார்ஷ், பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஜோடி அதிர்ச்சி துவக்கம் கொடுத்தது. முதல் ஓவரை ஹேசல்வுட் வீசினார். பவுன்சராக வந்த 3வது பந்து சுப்மன் ‘ஹெல்மெட்’ முன் பகுதியில் பலமாக தாக்கியது. அடுத்து வந்த பார்ட்லெட் ஓவரில் அபிஷேக், ஒரு பவுண்டரி, சிக்சர் விளாச, மொத்தம் 17 ரன் கிடைத்தன.

இம்மகிழ்ச்சி சில நிமிடம் கூட நிலைக்கவில்லை. ஹேசல்வுட் வீசிய 2வது ஓவரில் சுப்மன் (5), மார்ஷிடம் ‘கேட்ச்’ கொடுத்தார். 3வது வீரராக களமிறங்கினார் சஞ்சு சாம்சன். 4 பந்தில் 2 ரன் மட்டும் எடுத்து, நாதன் எல்லிஸ் பந்தில் அவுட்டானார். மீண்டும் வந்த ஹேசல்வுட், வீசிய ‘அவுட் சுவிங்’ பந்தில், கேப்டன் சூர்யகுமார் (1) நடையை கட்டினார். அடுத்த 2வது பந்தில் திலக் வர்மாவும் ‘டக்’ அவுட்டானார்.

இந்திய அணி 4.5 ஓவரில் 32/4 ரன் என திணறியது. ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும், மறுபக்கம் எல்லிஸ், ஹேசல்வுட் பந்துகளை அபிஷேக் பவுண்டரிக்கு விரட்டினார். பின் வந்த அக்சர் படேல் (7), மூன்றாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு வீணாக ரன் அவுட்டானார்.

ஷிவம் துபேவுக்கு முன்னதாக வந்தார் ஹர்ஷித் ராணா. குனேமன், ஸ்டாய்னிஸ் பந்துகளில் பவுண்டரி அடித்து ஆறுதல் தந்தார். மறுபக்கம் அபிஷேக், 23 பந்தில் அரைசதம் அடித்தார். சர்வதேச ‘டி-20’ல் இது இவரது 6வது அரைசதம். ஸ்டாய்னிஸ் பந்தில் ஹர்ஷித் சிக்சர் அடிக்க, இந்திய அணி 15 ஓவரில் 105/5 ரன்களை எட்டியது.

16 வது ஓவரை வீசிய பார்ட்லெட், 2வது பந்தில் ஹர்ஷித்தை (35) வெளியேற்றினார். வந்த வேகத்தில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஷிவம் துபே (4), அடுத்த பந்தில் அவுட்டானார். மீண்டும் வந்த பார்ட்லெட் ஓவரில் அபிஷேக், 4, 6 என அடுத்தடுத்து விளாச, 15 ரன் கிடைத்தன. இவர் 37 பந்தில் 68 ரன் எடுத்த போது, எல்லிஸ் பந்தில் அவுட்டானார். கடைசியில் பும்ரா (0) ரன் அவுட்டானார். இந்திய அணி 18.4 ஓவரில் 125 ரன்னில் ஆல் அவுட்டானது. ஹேசல்வுட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

எளிய இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு மிட்சல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஜோடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்த போது, ஹெட் (28), வருண் சுழலில் சிக்கினார். 26 பந்தில் 46 ரன் எடுத்த மார்ஷ், குல்தீப் பந்தில் வீழ்ந்தார். டிம் டேவிட் (1), இங்லிஸ் (20), ஓவன் (14), ஷார்ட் (0) என அடுத்தடுத்து அவுட்டான போதும், ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவரில் 126/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா 0-1 என தொடரில் பின்தங்கியது. இந்தியா சார்பில் பும்ரா, குல்தீப், வருண் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

55

இலங்கை சுற்றுலாத் துறையில் மைல்கல்: இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கைக் கடந்தது

November 17, 2025

2025 ஆம் ஆண்டுக்கான இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை இலக்கை மீறி, இலங்கை சுற்றுலாத் துறை இன்று (17)

2

உள்ளூர் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம்!

November 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17)

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை