சாலே (Suresh Salley) தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்குப் போதிய சான்றுகள் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
தனது கைது மற்றும் தடுப்புக் காவலுக்கு எதிராக சுரேஷ் சாலேதாக்கல் செய்துள்ள ரீட் மனுவுக்கு (Writ application) ஆதரவாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 இடைமனுக்கள் (Intervening petitions) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹார்ஷி ஹேரத் இக்கருத்துக்களை முன்வைத்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் முக்கிய வாதங்கள்
-
கடவுச்சீட்டு விவரங்களில் முரண்பாடு:
-
மனுதாரர் 2019 ஜனவரி 3 அன்று பாதுகாப்புப் பயிற்சி வகுப்பிற்காக இந்தியா சென்று அதே ஆண்டு டிசம்பரில் திரும்பியதாகக் கூறியுள்ளார்.
மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயப் பணிகளை முடித்த பின்னர் தனது இராஜதந்திர கடவுச்சீட்டை (Diplomatic passport) வெளியுறவு அமைச்சிடம் ஒப்படைத்துவிட்டதாக CID விசாரணையில் தெரிவித்துள்ளார்.எனினும், அதே இராஜதந்திர கடவுச்சீட்டின் சான்றளிக்கப்பட்ட நகலை அவரே நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் சான்றளிக்கப்பட்ட நகல் எவ்வாறு கிடைத்தது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
64 பக்கங்களைக் கொண்ட கடவுச்சீட்டில் குறிப்பிட்ட சில பக்கங்களை மட்டுமே அவர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பித்துள்ளார்.
சாதனங்களுக்கான கடவுச்சொற்களை மறுத்தல்:
-
தனது மொபைல் போன் மற்றும் கணினிக்கான கடவுச்சொற்களை (Passwords) வழங்க சல்லே மறுத்துவிட்டார்.
-
இதனால் புலனாய்வாளர்கள் நீதிமன்ற உத்தரவைப் பெற்றே அவரது மின்னணு சாதனங்களை அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
-
-
-
இடைமனுக்களுக்கான சட்டப்பூர்வ அடிப்படையின்மை:
-
பெங்கமுவே நாலக தேரர், அஹுங்கல்லே சிரி குணானந்த தேரர், யாப்பானயே சுகத வன்ச தேரர், மேடகொட அபயதிஸ்ஸ தேரர், கலாநிதி குணதாச அமரசேகர, கலாநிதி வசந்த பண்டார மற்றும் தேசிய தேசப்பற்று இயக்கம் ஆகியோரால் இந்த இடைமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முதன்மை மனுவில் உள்ள வாதங்களையே இந்த இடைமனுதாரர்களும் மீண்டும் கூறியுள்ளனர்.
இது தனிநபர் சுதந்திரம் தொடர்பான வழக்கு என்பதால், சட்டவிரோதக் கைது தொடர்பான நிவாரணங்களுக்கு உச்ச நீதிமன்றத்திலேயே அடிப்படை உரிமை மனு (FR Petition) தாக்கல் செய்யப்பட வேண்டுமே தவிர மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு கோர சட்ட அடிப்படை இல்லை என வாதாடப்பட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய ஆயர் முன் விசாரணை நடைபெற்றது. இந்த இடைமனுக்களை மேலும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது குறித்த நீதிமன்றத் தீர்ப்பு செப்டம்பர் 7 அன்று அறிவிக்கப்படவுள்ளது.
-