மீண்டும் அம்புலுவாவ மலையில் பாரிய அனர்த்தம்?

அம்புலுவாவ மலை அடிவாரத்தில் இருக்கும் கிராமங்கள் மீண்டும் மண்ணில் புதையுண்டு போகலாம் என கம்பளை பிதேசத்தின் செயலாளர் ஆத்மா தில்ருஷி ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

பிரதேச செயலாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு மண்சரிவு மற்றும் பாரிய கற்கள் சரிந்து பாரிய அழிவு ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே தான் மீண்டும் அறியத் தருகின்றோம். மண்சரிவு ஏற்பட்டு பாரிய அழிவை சந்தித்த நிலையில் மீளவும் வெடிப்புக்கள் மற்றும் பாரிய கற்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு பின்னரும் பொறுப்பான அதிகாரிகள் கனயீனமாக விடாது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, கம்பளை பிதேசத்தில் உள்ள கிராமசேவகர்கள் அநேகர் தங்களின் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் கற் பாறைகளில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் தொடர்பில் புகைப்பட சாட்சிகளுடன் பிரதேச செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்புலுவாவ மலையில் அரச காணிகளில் சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் பல சட்டவிரோத நடவடிக்கைகளால் இவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சில அரச கட்டிடங்கள் வெளியாருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளன. மலை உச்சியில் பல பாரிய கற்கள் வெடி வைக்கப்பட்டு தகர்க்கப்பட்டுள்ளன. அதனால் எதிர்வரும் பாரிய அழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இதன்போது அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

December 8, 2025

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.வடக்கு ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ளது அமோரி

chand

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

December 8, 2025

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர்

Judment

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் போலி சட்டத்தரணி?

December 8, 2025

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

old

யாழ்.பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம்

December 8, 2025

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும்

chinm

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு விளைவிக்கிறார் சின்மயி!

December 8, 2025

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு

chira

சிரஞ்சீவி – நயன்தாரா இணைவு

December 8, 2025

நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்துள்ள புதிய படத்தில் இருந்து சசிரேகா எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியின்

chami_1

பெண் விமானியின் கோரிக்கை; தந்தை வழித்தன்மையை உறுதிப்படுத்த கிரிக்கெட் வீரர் மறுப்பு

December 8, 2025

தனது குழந்தையின் தந்தைவழித்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ அறிக்கையைப் பெற நீதிமன்ற உத்தரவைக் கோரிய பெண் விமானியின் கோரிக்கைக்கு கிரிக்கெட் வீரர்

nori

பிரித்தானியாவின் நொரிஸ் முதற் தடவையாக சம்பியனானார்

December 8, 2025

முதற் தடவையாக மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் போர்மியுலா வண் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அபு தாபி குரான்

sel

செல்டா விகோவிடம் தோற்ற றியல் மட்ரிட்

December 8, 2025

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியில் 0-2 என்ற

chi

மனித நுகர்வுக்கு பொருந்தாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்

December 8, 2025

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல

water fal

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன?

December 8, 2025

நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் துறையின் அளவீட்டு

nuw

டித்வா சூறாவளியால் விவசாயத் துறைச் சேதம்; ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

December 8, 2025

டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வதற்கும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர