மீண்டும் அதிகரிக்கவுள்ள மின்சாரக் கட்டணம்?

இலங்கையில் ‘பவர் வீலிங்’ எனப்படும் மின்சார விநியோக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தாமல், ஏற்றுமதித் தொழிற்சாலைகள் மீது மீண்டும் மின்சாரக் கட்டண உயர்வைத் திணிப்பது நாட்டுக்கு பாரிய பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும் என ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குறைந்த மழைவீழ்ச்சி, நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தின் செயலிழப்பு மற்றும் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள 38 பில்லியன் ரூபாய் நட்டத்தை ஈடுகட்ட, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த வாரம் விசேட கட்டண திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிலையில், சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர்கள் சங்கம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், அரசாங்கம் 95 சதவீதமான சிறிய நுகர்வோருக்கு மானியம் வழங்கியுள்ள நிலையில், 38 பில்லியன் ரூபாய் நட்டத்தில் சுமார் 23 பில்லியன் ரூபாயை தொழிற்சாலைகள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களே சுமக்க வேண்டியுள்ளது.

அத்துடன், இந்தியா, வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மின்சாரக் கட்டணம் அதிகமாக இருப்பதால் சர்வதேச சந்தையில் எமது ஏற்றுமதிப் பொருட்களின் விலை அதிகரித்து, கேள்வி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தின்படி, தொழிற்சாலைகள் நேரடியாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர்களிடம் மின்சாரத்தைப் பெற்று, தேசிய மின் கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளது.

ஆனால், இதுவரை இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளன. குறைந்த விலையில் கிடைக்கும் சூரிய சக்தி அல்லது காற்றாலை மின்சாரத்தை நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் வசதியை உடனடியாக வழங்க வேண்டும் தொழிற்சாலைகள் மீதான கட்டண உயர்வுக்கு ஒரு உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும்.

இந்தக் கட்டண உயர்வு தற்காலிகமானதாக இருக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் இது தானாகவே காலாவதியாக வேண்டும்.

மின்சார சபை எதிர்பார்த்ததை விட குறைந்த நட்டம் அல்லது லாபம் ஈட்டினால், மேலதிகமாக அறவிடப்பட்ட பணத்தை நுகர்வோருக்கு மீள வழங்க வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு நேரடியாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்க அனுமதிப்பதன் மூலம், இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவை ஆண்டுக்கு சுமார் 50 முதல் 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை குறைக்க முடியும் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 8.7 சதவீதக் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு உயர்வு ஏற்பட்டால் அது 2026 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பாதிக்கும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்

ner

அரச சேவையில் தேசிய நேர்மை வாரம்!

July 28, 2026

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா”

photo-collage.png (3)

ஓகஸ்ட் 30; சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் குறித்த விசேட சந்திப்பு

July 28, 2026

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில்

sea

அவசர வானிலை எச்சரிக்கை!

July 28, 2026

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது

sa

நாட்டை அரசாங்கம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது…

July 28, 2026

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள்

spo

மெய்வல்லுநர் தெரிவுக்குழு இராஜினாமா!

July 28, 2026

இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக

YQIVVADQMVALHP6FFWJKTJMBMI

அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் பயணித்த வாகனம் 140 கி.மீ வேகத்தைத் தொட்டதால் பொலிஸார் துரத்துவதைக் கைவிட்டனர்

July 28, 2026

திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரின் வாகனத்தைப் பொலிஸார் டான் வேலி பார்க்வேயில்

Arrest

தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது

July 28, 2026

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை,

rain cana

ஜி.டி.ஏ (GTA) பகுதியில் 50 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம்

July 28, 2026

டொராண்டோ நகரில் இன்று இரவு கனமழையும் இடியுடன் கூடிய புயலும் வீசக்கூடும் என்பதால், ‘டொராண்டோ மற்றும் பிராந்திய பாதுகாப்பு அதிகாரசபை’

namal

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சி – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

July 27, 2026

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் தார்மீக