ஏழாலை மேற்கு பகுதியில் ஆணொருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டாள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் கடை ஒன்றினை நடாத்தி வருகின்றார். அந்த கடைக்கு மதுபோதையில் சென்ற சந்தேகநபர் மிக்சர் பக்கட்டுகளை தருமாறு கேட்டுள்ளார். ஏற்கனவே கடனுள்ள காரணத்தால் அவர் மிக்சர் பைக்கட்டுகளை கொடுக்க மறுத்ததன் காரணமாக இருவருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
முரண்பாடு கைகலப்பாக மாறிய நிலையில் கத்தியால் குத்தி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலையை மேற்கொண்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.