பல ஆண்டுகளாக நடந்து வரும் நடிகர் சங்க கட்டிட வேலை முடிந்து அடுத்த மாதம் திறப்பு விழா நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார் விஷால். இதையடுத்து மீண்டும் அவரின் திருமண பேச்சு கிளம்பிவிட்டது.
நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த கட்டிடத்தை கட்டி முடித்து திறப்பு விழா நடத்தி அதில் நடக்கும் முதல் கல்யாணம் என் கல்யாணம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார் விஷால். ஆனால் கட்டிட வேலை முடிவதற்குள் விஷால் வாழ்க்கையில் என்னென்னவோ மாற்றங்கள் நடந்துவிட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா நடக்கும் என்றும், விஷாலின் பிறந்தநாளில் அவருக்கும், நடிகை சாய் தன்ஷிகாவுக்கும் கல்யாணம் நடக்கும் என்றும் தகவல் வெளியானது. அப்பாடி ஒரு வழியாக கட்டிடத்தையும் திறக்கிறார்கள், விஷால்ணாவுக்கும் திருமணம் நடக்கப் போகிறது என்று ரசிகர்கள் சந்தஷோப்பட்டார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
நடிகர் சங்க கட்டிட வேலை முடியாததால் விஷாலின் பிறந்தநாளில் திருமணத்திற்கு பதில் நிச்சயதார்த்தம் மட்டும் நடந்தது. இதையடுத்து அக்டோபர் மாதம் எப்படியும் நடிகர் சங்க கட்டிட திறப்பு விழாவை நடத்தி சாய் தன்ஷிகா கழுத்தில் தாலி கட்டிவிடுவார் விஷால் என்று தகவல் வெளியானது.