ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளது.
அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் சமூக ஊடகளை பயன்படுத்த கட்டுப்பாடுகளை கட்டுப்பாடுகளை விதிக்கப் பயன்படுத்தப்படும் வழிமுறைகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருவதாக ஞாயிற்றுக்கிழமை (23) மலேசிய தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.
சைபர்புல்லிங், நிதி மோசடிகள் மற்றும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற இணைய வழி வன்முறைகளிலிருந்து இளைஞர்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என மேலும் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு சமூக ஊடகங்களினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளமையினால் உலகளாவிய ரீதியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மனநல நெருக்கடியை ஏற்படுத்தியமை தொடர்பில் டிக்டொக், ஸ்னாப்சாட், கூகுள் மற்றும் மெட்டா தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிலும் 16 வயதுக்குட்பட்டவர்களின் சமூக ஊடக கணக்குகள் எதிர்வரும் மாதம் செயலிழக்கச் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.