மத்திய கிழக்கை சூளும் போர் பதற்றம்…

ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி, கடந்த நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து கலந்து கொண்டு வந்த விமானப்படை தளபதிகளுடனான ஆண்டு கூட்டத்தை இந்த ஆண்டு முதன்முறையாக தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.

இந்த நிகழ்வு, அமெரிக்கா வளைகுடா (Gulf) பிராந்தியத்தில் தனது இராணுவ இருப்பை அதிகரித்து வரும் நேரத்தில் நிகழ்ந்துள்ளது.

இதனால், இரு நாடுகளுக்கிடையே மோதல் தீவிரமடையலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

1989ஆம் ஆண்டு ஈரான் உச்ச தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து, பிப்ரவரி 8 அன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் அலி கமெனி ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கலந்து கொண்டுள்ளார்.

அதனால், இந்த ஆண்டு அவர் பங்கேற்காதது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு கூட்டம், ஈரான் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகின்றது.

1979ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் போது, விமானப்படை அதிகாரிகள் குழு, இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் அயதுல்லா அலி கமேனிக்கு விசுவாசம் தெரிவித்த நிகழ்வை பெப்ரவரி 8 நினைவுகூருகிறது.

இந்த நிகழ்வே பஹ்லவி அரச வம்சத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் விமானப்படை தளபதிகள், நாட்டின் மதத் தலைமைத்துடன் சந்தித்து வந்தனர்.

கடந்த நான்கு தசாப்தங்களாக, கொரோனா தொற்று காலத்திலும் கூட, கமெனெி இந்த கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டார்.

ஆனால், இந்த ஆண்டு அவர் அந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக, ஈரான் ஆயுதப்படைகளின் தலைமை தளபதி அப்துல்ரஹீம் மூசாவி, விமானப்படை தளபதிகளை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளார்.

இந்த அசாதாரண மாற்றம், பாதுகாப்பு காரணங்களால் காமெனி பொதுவெளியில் தோன்றுவதை தவிர்த்திருக்கலாம், அல்லது முக்கிய தேசிய விவகாரங்களில் கவனம் செலுத்தி வரலாம் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

கமெனி கூட்டத்தை தவிர்த்தது, தெஹ்ரான்–வொஷிங்டன் உறவுகள் கடும் பதற்றத்தில் உள்ள நேரத்தில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்கா, வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் கடற்படை மற்றும் விமானப்படை வளங்களை நிலைநிறுத்தி வருகிறது.

இதற்கு பதிலளித்த ஈரான், அமெரிக்கா எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் தொடங்கினால், அது முழு மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் பரவக்கூடிய போராக மாறும் என்று பலமுறை எச்சரித்துள்ளது.

முன்னதாக பிராந்திய மோதல்களில் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அமெரிக்கா, ஈரானின் ஏவுகணை திட்டத்தையும் பேச்சுவார்த்தையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில், அணு திட்டம் மட்டுமே பேச்சுவார்த்தை பொருளாக இருக்க வேண்டும் என ஈரான் தெரிவித்து வருகிறது.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது