மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் மட்டுமே சட்டபூர்வமானது – செயலாளர் ஸ்டான்லி பிரஷாந்

கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் மட்டுமே சட்டபூர்வமான சங்கம் என விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்க தற்போதைய செயலாளர் சு. ஸ்டான்லி பிரஷாந் தெரிவித்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டுக்குப் பின்னர் மட்டக்களப்பில் மாவட்டத்துக்கான பூப்பந்தாட்ட மாவட்டச் சங்கம் என்ற ஒரு அமைப்பு செயற்பாட்டில் இருக்கவில்லை. இதற்கு முன்னர் வரை இருந்த மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்க நிர்வாகமானது கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்துடன் சேர்ந்து செல்ல முடியாது.

எனவே தாங்கள் தனித்து செயல்பட வேண்டும் என கூறிக்கொண்டு இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனத்துடன் நேரடியாக இணைந்து செயல்படப் போவதாக தெரிவித்துக் கொண்டு முறையற்ற விதமாக 2025 மே மாதத்தில் இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர் உடன் சேர்ந்து கொண்டு தனியாக தங்களது மாவட்டச் சங்கத்தைப் பதிவு செய்ய முயற்சி செய்தனர்.

இதனையடுத்து கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கமானது மட்டக்களப்பு மாவட்டச் சங்கத்தின் நிர்வாகத்துக்கு தெளிவான விளக்கங்களைக் கூறி, யாப்பின் படி நடக்குமாறு கேட்டிருந்தது. இருப்பினும், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல், நாங்கள் தனித்துதான் செயல்படுவோம் என்று முறையற்ற விதத்தில் இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் புது நிர்வாகத்தின் பிழையான உதவியுடன் தங்களது மாவட்டச் சங்கத்தைப் பதிவு செய்ய முற்பட்டனர்.

இதற்கு இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் புதிய தலைமை அனுமதியளிக்க முற்பட்ட போது, அவர்கள் செய்வது தவறு என கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்க நிர்வாகம் இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் பொதுச் சபை கூட்டத்தில் விவாதித்து, இந்தப் பதிவுக்கு இடைக்காலத் தடையை ஏற்படுத்தியது.

இந்த முறையற்ற விஷயத்தை இலங்கை விளையாட்டு அமைச்சுக்கு, கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்க நிர்வாகம் தெரியப்படுத்தியது. அதன் பிற்பாடு, விளையாட்டு அமைச்சினால் இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிரான விசாரணையில் அவர்கள் செய்தது தவறு என கண்டறிந்தது.

இதனையடுத்து கிழக்கு மாகாணச் சங்கத்தின் சிபாரிசு இல்லாமல் இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏதாவது மாவட்ட சங்கங்கள் கிழக்கு மாகாணத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அதை செல்லுபடியற்றதாக்குமாறு மேன்முறையீட்டுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் அந்த சங்கம் செல்லுபடியற்றது என 20.11.2025 திகதி கடிதம் அனுப்பியுள்ளது

எனவே கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் வழிகாட்டலுடன் மட்டக்களப்பில் செயற்படும் மட்டுமே சட்டபூர்வமான சங்கம் என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன் அதன் தலைவராக கே. சுரேஸ், செயலாளர் சு. ஸ்டான்லி பிரஷாந், பொருளாளராக ஏ.ஏ.எம். அஸீம் ஆகியோர் தற்போதைய நிர்வாகத்தினர் என அறியத்தருகின்றோம் என பிரஷாந் மேலும் கூறினார்.

glob

நாட்டைக் கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் கைகோருங்கள் – அனைத்துலகத் தமிழர் பேரவை

December 6, 2025

பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு, உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இன்றியமையாதவையாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை, உலகம்

iya

அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு – சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – காவிந்த ஜயவர்தன

December 6, 2025

இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த

Harini-Amarasuriya

பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை!

December 6, 2025

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச

tha

மண்சரிவால் தாயை பிரிந்த 3 மாத குழந்தை

December 6, 2025

மீமுரேவில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட 3 மாத குழந்தையை இராணுவத்தினர் தாயாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5)

bam

பம்பலப்பிட்டியில் விபத்து : 5 பேர் காயம்

December 6, 2025

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

mal

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் மாலைதீவினால் நன்கொடை

December 6, 2025

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால்

ifj_1

அவசரகாலச்சட்ட ம் தொடர்பான பிரதியமைச்சர் கருத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கண்டனம்!

December 6, 2025

ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும்

photo-collage.png (2)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய விழிப்புணர்வு

December 6, 2025

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து 16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில்

Anusa

யாழ். இளைஞர் அனுசன் சர்வதேச ரீதியில் வெற்றியாளராக தெரிவு

December 6, 2025

இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத்தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant

fa

அறவழியில் போராட்டம்; தையிட்டி விகாரையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிட்டவில்லை – அருட்தந்தை சத்திவேல்

December 6, 2025

தையிட்டி விகாரை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் இதுவரை கிட்டவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை

anu

அனர்த்த மரண எண்ணிக்கை தொடர்பாகப் பொய்த் தகவல் கூறிய எம்.பிக்கு எதிராக வழக்கு

December 6, 2025

நாடாளுமன்றத்தை தவிர்த்து வெளியில் போலியான பிரசாரம் முன்வைக்கப்பட்டிருந்தால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் என்று ஜனாதிபதி அநுர

co

கொலன்னாவ பகுதியில் பாரிய நெருக்கடி…

December 6, 2025

மெகொட கொலன்னாவ பகுதியில் வெள்ளம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட