மட்டக்களப்பில் 06 நாட்களில் 4 கொலைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 தினங்களில் 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை, 68 வயதுடைய விவசாயி ஒருவர் மிளகாய் தோட்டம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதி, வீட்டுத்திட்டம் பகுதியில் உள்ள தோட்டத்தில், சிறிமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த குறித்த நபர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள விளாவெட்டுவான் – நாவற்குடா பகுதியில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற மரணவீட்டில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியதில், மண்வெட்டி பிடியால் தாக்கப்பட்ட 35 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (18) உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கடந்த 17ஆம் திகதி சந்திவெளி பொலிஸ் பிரிவில் உள்ள சித்தாண்டி பகுதியில், பணம் தர மறுத்த தாயை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் 20 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள சிவபுரம் பகுதியில் குடும்பத் தகராறினால் தந்தையை தாக்கிய சம்பவத்தில், படுகாயமடைந்த 58 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதற்காக 25 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனுடன், மகாஓயா – சூரியடி பகுதியில் கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு ரயிலில் மோதுண்டு உயிரிழந்த விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடங்களுக்கு பொலிஸ் தடயவியல் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேற்படி கொலைச் சம்பவங்கள் தொடர்பில் களுவாஞ்சிக்குடி, சந்திவெளி, ஏறாவூர் மற்றும் வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனடாவில் எம்.ஜி.ஆர் 109; நிகழ்வு நிறைவு வெற்றிக் கொண்டாட்டம்!

April 19, 2026

செந்தில் குமரன் நிவாரண நிதியம் கனடாவில் நடத்திய எம்.ஜி.ஆர் 109 – நிதி திரட்டும் நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததையொட்டிய ஒன்றுகூடல்

WhatsApp Image 2026-04-19 at 18.23.12

மலையகத்தில் இந்திய வீடமைப்புத் திட்ட மூன்றாம் கட்டம் நிறைவு: 145 வீடுகளைக் கையளித்தார் இந்தியத் துணைத் தலைவர்

April 19, 2026

இலங்கையின் மலையகப் பகுதிகளில் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்திய வீடமைப்புத் திட்டத்தின் (Indian Housing Project) மூன்றாம் கட்டம்

sa45

இந்தியகுடியரசுத் துணைத் தலைவருடன் சஜித் பிரேமதாச சந்திப்பு

April 19, 2026

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்துப் பேச்சுவார்த்தை

kl

எரிபொருள் விலை குறைப்புக்கு வாய்ப்பு: மசகு எண்ணெய் கப்பல் வருகை

April 19, 2026

மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 9-12

d

வவுனியாவிலும் அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

April 19, 2026

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (19) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

s

கடற்படையினரால் கணவர் சித்திரவதை: மனைவி உண்ணாவிரதப் போராட்டம்

April 19, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில், கடற்படையினரால் மீனவரான தனது கணவர் சித்திரவதை செய்யப்பட்டமைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. எனவே தாம் மட்டக்களப்பு உதவி

crim

மட்டக்களப்பில் 06 நாட்களில் 4 கொலைகள்

April 19, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 தினங்களில் 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக

ca do

கனடா பொருளாதார மந்தநிலையைச் சந்திக்க 30% வாய்ப்பு?

April 19, 2026

உலகளாவிய பொருளாதார அழுத்தங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், கனடா பொருளாதார பின்னடைவைச் சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள்

lax

நிலக்கரி ஊழல் விசாரணை அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஒப்படையுங்கள் – லக்ஷ்மன் கிரியெல்ல

April 19, 2026

நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் குறித்து பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தும் தணிக்கை அறிக்கையை நாடாளுமன்றத்தின் ஊடாக உடனடியாக சட்டமா

har

இந்தியத் துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு

April 19, 2026

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், இன்று (19) கொழும்பு அலரி

Geethanath

அகதிகள், மீனவர் பிரச்சினை மற்றும் போக்குவரத்துத் தொடர்பு; இந்தியா-இலங்கை பேச்சு நடத்த வேண்டும் – கீதாநாத் காசிலிங்கம்

April 19, 2026

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரின் இந்த உயர்மட்ட விஜயமானது வெறும் சம்பிரதாய நிகழ்வாக அமையாமல், பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள

ar

ரஷ்ய யுவதி இலங்கைப் புகையிரதத்தில் மோதி உயிரிழப்பு

April 19, 2026

பெலியத்தவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிவேகப் புகையிரதத்தில் மோதி 23 வயதுடைய ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தின்