மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது!

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது. இதன் பொறுப்பை ஏற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். அதேபோல் பொலிஸ் துறையும் இன்று அரசியலாக்கப்பட்டுள்ளது. ஆகவே பொலிஸ்மா அதிபரும் உடன் பதவி விலக வேண்டும் என மக்கள் குரல் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் குரல் அமைப்பின் சார்பாக ஊடக அறிக்கையை வெளியிட்டு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

படுகொலை கலாசாரம் 2025 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக படுகொலை கலாசாரம் பலமடைந்து தற்போது தீவிரமடைந்துள்ளது.

நீதியை நிலைநாட்டும் நீதிமன்றம் அதிகாரிகள், சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டமை ஒட்டுமொத்த சமூக கட்டமைப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எந்நேரத்தில் எங்கு படுகொலைகள் இடம்பெறும் என்ற அச்சத்தில் தான் மக்கள் இன்று வாழ்கிறார்கள்.

தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் இயல்புவாழ்க்கையை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் இந்த பொறுப்பை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளது.பொது பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் சகல கட்டமைப்பும் பலவீனமடைந்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது. இதன் பொறுப்பை ஏற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். அதேபோல் பொலிஸ் துறையும் இன்று அரசியலாக்கப்பட்டுள்ளது. ஆகவே பொலிஸ்மா அதிபரும் உடன் பதவி விலக வேண்டும்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. பாதுகாப்பை பலப்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை அரசியல்மயப்படுத்த கூடாது என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது