மகாகவி பாரதியாரின் முற்போக்குச் சிந்தனைகள் இன்னும் செயல்வடிவம் பெறவில்லை – ஆளுநர்

மகாகவி பாரதியார் நூற்றாண்டுக்கு முன்பே விதைத்துச் சென்ற முற்போக்குச் சிந்தனைகள், இன்றும் எமது சமூகத்தில் முழுமையான செயல்வடிவம் பெறவில்லை என்பதே நிதர்சனம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஜனன தின நிகழ்வு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை (11.12.2025) மாலை நடைபெற்றது.

இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சிறீ சாய்முரளி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு, பாரதியாரின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், டித்வா பேரிடரால் எமது மாகாணம் பாதிக்கப்பட்டுள்ள இக்கட்டான சூழலில், இந்நிகழ்வு மிகவும் எளிமையான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது. இந்தத் தருணத்தில், வடக்கு மாகாண மக்கள் சார்பாக இந்திய அரசாங்கத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எமது மக்கள் அனர்த்தத்தைச் சந்தித்தபோது, மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் எனப் பல்வேறு விடயங்களில் முதலாவது நாடாக இந்தியா எமக்குக் கரம் கொடுத்திருக்கின்றது. அந்த உதவியை நாம் என்றும் நினைவில் கொள்வோம்.

பாரதியார் இந்தியாவில் பிறந்திருந்தாலும், தமிழுக்கு அவர் ஆற்றிய அளப்பரிய சேவையானது அவரை ஒரு பிராந்தியக் கவிஞராக அல்லாமல், உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் ஒரு ஆளுமையாக மாற்றியிருக்கிறது. எமது சிறுபராயத்தில் பேச்சுப் போட்டிகள் என்றால், பாரதியார் இல்லாத தலைப்புகளே இருக்காது என்னும் அளவுக்கு அவர் எம்முடன் ஒன்றிப்போயுள்ளார்.

நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமூக மாற்றத்துக்கான முற்போக்குச் சிந்தனைகளைத் துணிவுடன் விதைத்தவர் பாரதி. அவர் ஒரு சிறந்த கவிஞராக மட்டுமல்லாமல், இந்திய தேச விடுதலிக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒரு போராளியாகவும் திகழ்ந்தார். தனது கனல்தெறிக்கும் பாடல்கள் மூலம் மக்களிடத்தில் தேசபக்தியையும், விடுதலை உணர்வையும் ஊட்டினார்.

பல மொழிகளைக் கற்றறிந்த பன்மொழிப் புலவராகத் திகழ்ந்த அவர், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ எனத் தமிழுக்கு மகுடம் சூட்டினார். இவ்வுலகில் அவர் வாழ்ந்தது குறுகிய காலமே என்றாலும், அவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை. அதனால்தான் நூற்றாண்டு கடந்தும் அவர் இன்றும் நம்மால் போற்றப்படுகின்றார், என்றார்.

இந்நிகழ்வில் யாழ். தமிழ்ச் சங்கத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

nava

நாவற்காடு கிராமத்தில் கிராம சேவையாளரால் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை?

December 14, 2025

எனக்கு உதவி செய்யாவிட்டாலும் என்னைபோல் எமது கிராமத்தில் நிறைய பெண்கள் கஸ்டப்படுகின்றார்கள். அவர்களுக்காவது உதவி செய்யுங்கள் என நாவற்காடு கிராமத்தில்

Weather

டிசம்பர் 16 முதல் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

December 14, 2025

கிழக்கிலிருந்தான ஒரு அலை காற்றின் தாக்கம் காரணமாக டிசம்பர் 16ஆம் திகதியிலிருந்து நாட்டில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய

man

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதி விநியோக வழிகாட்டல்கள் வெளியீடு

December 14, 2025

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதியை விநியோகிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பான வழிகாட்டுதல்களை பாதுகாப்பு அமைச்சகம்

mihi

மிகிந்தலையில் பாரிய வெடிப்புக்கள்?

December 14, 2025

மிகிந்தலை விகாரையில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக மிகிந்தலை விகாராதிபதி தெரிவித்துள்ளார். இன்று (14.12.2025) தேசிய கட்டிடங்கள் ஆராச்சி திணைக்களத்தின் அநுராதபுரம்

1751730278-rice-hjg-L

அனர்த்தம் ஏற்பட்டிருந்தும் கூட எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது – விவசாய அமைச்சர்

December 14, 2025

அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். சில

arre

ஹேரோயினை கடத்த முற்பட்டவர் கைது

December 14, 2025

ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாக

3 dd

டித்வா புயல் காரணமாக சுமார் 6164 வரையிலான வீடுகள் முழுமையான சேதம்

December 14, 2025

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

gun

காட்டுப் பகுதியில் கட்டப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

December 14, 2025

பலாங்கொடை, சமனல வேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தெட்டுவ கிராமத்தின், காட்டுப் பகுதியில், கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம்

HAri

புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை மீளாய்வு!

December 14, 2025

யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (10) அன்று பிரதமர்

Mujibar Rahuman

குழு ஒன்று முஜிபுரின் தங்கையிடம் விசாரணை: முஜிபுர் முறைப்பாடு

December 14, 2025

குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்ததாகக் கூறிக்கொள்ளும் குழு ஒன்று, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் கல்கிஸையில் உள்ள

ரயிலில் யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்!

December 14, 2025

ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்

சிரியாவில் அமெரிக்க வீரர்கள் படுகொலை!

December 14, 2025

சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும்