போதைப்பொருள் தடுப்பு; அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் அதிரடி நடவடிக்கை

அனைத்து அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தொன் கணக்கிலும் கிலோகிராம் கணக்கிலும் போதைப்பொருட்கள் தொடர்ச்சியாகக் கைப்பற்றப்பட்டு வரும் நிலையிலும், நாட்டில் அவை இன்னமும் பெருமளவில் புழக்கத்தில் இருப்பதை அடுத்து, போதைப்பொருளை ஒழிக்கும் நோக்குடன் அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பாவனைக்கான தேவையை முற்றாக நீக்குவதற்கும் இந்த குழுக்கள் செயற்படும். பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஊடாக அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை நாளை (17) வெளியிடப்படவுள்ளது.

இந்த சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு நிறுவனத் தலைவரும் தமது நிறுவனத்தை போதைப்பொருள் அற்ற நிறுவனமாக உறுதிப்படுத்துவது கட்டாயமாகும். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அல்லது பாவனையாளர்கள் நிறுவனங்களில் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் பொறுப்பு நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, கல்விச் செயலாளர் ஊடாகவும் நாளை (17) சுற்றறிக்கையொன்று வெளியிடப்படவுள்ளது. இதன்மூலம், அனைத்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளது.

தொலைதூர கிராமப் பாடசாலைகளில் கூட போதைப்பொருள் பாவனை குறித்த தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இந்த நடவடிக்கை அவசியமாகிறது. தற்போது பல இடங்களில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் வழங்க வசதியாக 1818 என்ற புதிய உதவி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய போதைப்பொருள் சபைக்கான அலுவலகம் ஒன்று எதிர்வரும் 22ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

தற்போது ஜனாதிபதி செயலகம் ஊடாக தற்காலிகமாக 1818 என்ற உதவி இலக்கம் செயற்பட்டு வருதுடன், முதல் 5 நாட்களில் மாத்திரம் சுமார் 1000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இந்தத் தகவல்களின் அடிப்படையில் தற்போது சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.

fs

காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்

November 17, 2025

காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும்

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது

theep

விஜயகாந்த் பட நடிகை: பெரிய வீட்டு மருமகள்?

November 17, 2025

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும்

ma

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

November 17, 2025

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி

55

இலங்கை சுற்றுலாத் துறையில் மைல்கல்: இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கைக் கடந்தது

November 17, 2025

2025 ஆம் ஆண்டுக்கான இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை இலக்கை மீறி, இலங்கை சுற்றுலாத் துறை இன்று (17)

2

உள்ளூர் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம்!

November 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17)

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்