போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை; 44,806 சந்தேகநபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 44,806 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பிரிவு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன தெரிவித்தார்.

பத்தரமுல்லை பகுதியில் நேற்று புதன்கிழமை (25) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட முப்படையினரும் இணைந்து நாட்டில் போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிக்கும் நோக்குடனும், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்குடனும் இந்த விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 221 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் 14,761 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 223 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாக 16,490 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 108 கிலோ கிராம் குஷ், 81 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 8,34,000 அதிகமான போதை மாத்திரைகளும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேசிய அளவிலான முழுநாடும் ஒன்றாக என்னும் விசேட நடவடிக்கையின் கீழ், இதுவரையில் 1 இலட்சத்து 3ஆயிரம் 899 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப்பொருள் உபயோகம் மற்றும் வர்த்தகத்துன் தொடர்புடையவர்களே அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 1,419 கிலோ கிராம் ஐஸ் , 526 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 3,898 கிலோ கிராம் கஞ்சா ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

 

மேலும் விமான நிலையம் ஊடாகக் கொண்டுவரப்பட்ட 199 கிலோ கிராம் குஷ் மற்றும் 123 கிலோ கிராம் அசிஷ், 9,41,245 போதை மாத்திரைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான நபர்களில் 146 பேருக்கு எதிராகச் சட்டவிரோத சொத்துக் குவிப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், 2,018 சந்தேகநபர்களிடம் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது 1,669 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 3,096 பேர் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி முதல் ஒரு வார காலத்திற்கு விசேட போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் நாடு தழுவிய ரீதியில் இன்னும் பாரிய அளவிலான சுற்றிவளைப்புகளை முன்னெடுக்க அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

tru

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும்

ele dea

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 18, 2026

ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில்

hurm

ஹோமுஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மீண்டும் மூடியது

April 18, 2026

ஈரான் தனது இராணுவத்தின் மூலம் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு

lal

10 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அமைச்சர் லால் காந்தா

April 18, 2026

தனது 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைத் தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக்

bud

வெள்ளை மாளிகையில் உலக அமைதிக்காக பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு

April 18, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக ஆசி வேண்டி, கடந்த

sc

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம்

April 18, 2026

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) எச்சரிக்கை

d

யாழில் நிதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத வீதி

April 18, 2026

நிதி ஒதுக்கப்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் பிரதான வீதி நான்கு மாதங்களுக்கு பின்பும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Ikkiya

 எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளரின் இராஜினாமா ஒரு கண்துடைப்பு 

April 18, 2026

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இராஜினாமாவானது நிலக்கரி கொள்முதல் மோசடியைப் பொதுமக்களின்

east

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணையில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டும் புதிய அறிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை, இலங்கையின் நீண்டகால விசாரணைகள் இப்போதுதான் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக்

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக