கம்பஹாவில் உடுகம்பொல சந்தைக்கு அருகில் பெண் ஒருவர், போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்று சமூக ஊடங்களில் பரவி வரும் காணொளி குறித்து பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிய கார் ஒன்றை பொலிஸார் சோதனைக்குட்படுத்த முயன்றுள்ளனர்.
இதன்போது காரில் இருந்த பெண் ஒருவர் பொலிஸ் உத்தரவைம் மீறி காரை செலுத்திச் சென்றுள்ள நிலையில் மினுவாங்கொடை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த பெண் தான் ஒரு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் சகோதரி என கூறி பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த காணொளி சமூக ஊடங்களில் தீவிரமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றுள்ளது.
ஆனால் அந்த பெண் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் சகோதரி இல்லை என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.