பொறுப்பு மனப்பான்மையைக் கொண்ட குடிமகனை உருவாக்குவதே புதிய கல்விச் சீர்திருத்தத்தின் நோக்கம் – பிரதமர்

போட்டி மனப்பான்மை மிக்க கல்விக்குப் பதிலாக, ஒத்துழைப்பு மற்றும் பொறுப்பு மனப்பான்மையைக் கொண்ட குடிமகனை உருவாக்குவதே புதிய கல்விச் சீர்திருத்தத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இன்று (நவம்பர் 18) நடைபெற்ற, பசுமை மாற்றத்தினுள் வகிபாகம் குறித்து ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் பசுபிக் வலய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான மாநாட்டில் உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிதி வழங்கப்படும் Erasmus+ நிகழ்ச்சி, கல்வி, பயிற்சி, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பிற்கான உலகின் முன்னணி நிகழ்ச்சித்திட்டமாகும். நாடுகளுக்கிடையேயான நகர்வுகள், கலாசாரப் பரிமாற்றம், திறன் அபிவிருத்தி மற்றும் கொள்கை அபிவிருத்தி ஆகியவற்றை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

இந்த நிகழ்ச்சித்திட்டமானது இலங்கையின் உயர்கல்வி, தொழிற்பயிற்சி, இளைஞர் அபிவிருத்தி மற்றும் நிறுவனப் பங்காண்மைகளுக்கான ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதோடு, இந்த மாநாடு நவம்பர் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

பிற்கால காலனித்துவ உரிமையாக நமக்குக் கிடைக்கப்பெற்ற கல்வியின் விளைவாக, நமது நாடு உயர்ந்த கல்வியறிவு விகிதங்களைக் கொண்ட ஒரு நாடாக மாறி இருக்கின்றது.

ஆயினும், தற்போது கல்வி என்பது தனிமனித வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட ஒன்றாக மாறி இருக்கின்றது. இதனால், கல்வித் திட்டங்கள், கோட்பாடுகள் ஆகியனவும் போட்டித் தன்மையையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.

இதன் விளைவாக, நமது கல்வி முறை போட்டித்தன்மை மிகுந்த, பரீட்சையை மையமாகக் கொண்டதாக மாறி இருக்கின்றது. ஆயினும் கல்வி என்பது தனிமனித வெற்றியைக் குறியாகக் கொண்ட ஒரு செயல்பாடு மாத்திரமல்ல.

தற்போது இந்தக் கட்டமைப்பிலிருந்து விலகி, கல்வி என்பது வெறுமனே உயர்ந்த புள்ளிகளைப் பெறுவது மட்டுமல்லாத, கூட்டு அறிவைப் பகிர்ந்து கொள்ளும், மாற்றத்திற்கான கல்வியின் உண்மையான நோக்கத்தை சரி செய்வதற்கே நாம் முயற்சிக்கிறோம்.

கல்வியின் மாற்றியமைக்கும் சக்தியை பெரும்பாலும் நாம் மறந்து விடுகிறோம். அது தனிமனித வெற்றிக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகும். மக்களை அரசியல், சமூக-பொருளாதார ரீதியில் ஒன்றிணைக்கும் ஆற்றல் கல்விக்கு இருக்கின்றது. ஆகையினால், பரஸ்பர எதிர்பார்ப்பு மற்றும் பரஸ்பர வெற்றி ஆகியவற்றைக் கொண்ட ஒரு துறையாகக் கல்வியை மாற்றுவது மிகவும் அவசியமானதாகும்.

எமது புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம், ஒத்துழைப்புமிக்க கற்றல், மற்றவர்கள் மீதான பொறுப்புணர்வு, ஆகியவற்றோடு உலகத்தின் மீதான பொறுப்புணர்வை ஏற்படுத்துதல், குறிப்பாக இன்று நாம் எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான உலகளாவிய போராட்டங்களின் பின்னணியில் இது மிகவும் முக்கியமானதாகும்.

இன்றைய உலகில் தலைத் தூக்கி வரும் அறிவியல் பூர்வமற்ற வழிமுறைகள் மற்றும் போலியான தகவல்கள் பரவிவரும் பின்னணியில், கல்வியின் முக்கியத்துவம் மென்மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி, பல்கலைக்கழகக் கட்டமைப்பில் காணப்படும் அழுத்தங்களையும் இந்த மாற்றத்தின் மூலம் வெற்றிகொள்ள முடியும்.

இத்தகைய விவாதங்கள், பரிமாறல்கள் மற்றும் கலந்துரையாடல்களின் முக்கியத்துவம் ஆகியன, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு இணைந்து செயல்படும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கல்வியின் அவசியத்தையே நமக்கு மென்மேலும் உணர்த்துகின்றது.

நமது கல்வி முறையை போட்டி மனப்பான்மையின் சிறையிலிருந்து விடுவித்து, ஒத்துழைப்புமிக்க, பொறுப்புமிக்க பகிர்ந்து கொள்ளுதலின் சுதந்திரமான இடைவெளியாக மாற்றுவதே இலங்கையின் எதிர்காலத்திற்காக நாடு எதிர்கொள்ளும் அடிப்படைச் சவாலாகும் எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மென் மெரினோ, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாளக களுவெவ மற்றும் பிராந்தியப் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

By C.G.Prashanthan

dd

வடமராட்சியின் இரண்டாவது கந்தபுராண விழா!

November 18, 2025

வடமராட்சி கந்தபுராண கழகம் நடாத்திய இரண்டாவது கந்தபுராண விழா வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அதன் தலைவர்

1000922193

வல்வெட்டித்துறையில் 90 பேர் இரத்ததானம்!

November 18, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறை இரத்ததான சங்கம்நடாத்திய இரத்ததான முகாமில் 90 பேர் இன்று இரத்ததானம் செய்துள்ளனர். வல்வெட்டித்துறை நெடியாகாடு கணபதி

dan

தனுஷ் இயக்கத்தில்; ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம்

November 18, 2025

உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம் தயாரிக்க உள்ளார்.

kan

3 நாட்களில் ரூ.25 கோடி வசூலித்த “காந்தா”

November 18, 2025

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் ‘காந்தா’. இப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

sim

சிம்பு -ராம்குமார் பாலகிருஷ்ணன் படம் எப்போது?

November 18, 2025

சிம்பு நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49 திரைப்படம் தயாராக இருந்தது.ஆனால் அப்படம் திடீரென தள்ளி வைக்கப்பட்ட நிலையில்

tea

2030 இல் 2.5 பில்லியன் டொலர் வரை தேயிலை ஏற்றுமதி வருமானம்?

November 18, 2025

அரசாங்கத்தால் 2030ஆம் ஆண்டு தேயிலை உற்பத்திக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 மில்லியன் கிலோ கிராம் இலக்கில் 75 சதவீத பங்களிப்பு

raugh4

இஸ்ரேல் கருவியாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு மாற்றப்பட்டுள்ளது – ரவூப் ஹக்கீம்

November 18, 2025

பயங்கரவாத விசாரணைப்பிரிவு இஸ்ரேலுக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டிக்க முடியாத அளவுக்கு வெளிவிவகார அமைச்சு கோழைத்தனமாக

Viyaskantha

இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் இணையும் வியாஸ்காந்த்!

November 18, 2025

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில் இளம் சுழற் பந்து வீச்சாளர் விஜயகாந்த்

anantha

நாமல் ராஜபக்சவிற்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு – அமைச்சர் ஆனந்த விஜயபால!

November 18, 2025

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு உண்டு என பொது

pu

இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் பற்றி சபையில் – ஜனாதிபதி

November 18, 2025

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின்

rat

மழையால் பல பகுதிகளில் மண்சரிவு

November 18, 2025

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இம்மாவட்டத்தில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், மண்சரிவு அபாயமுள்ள

Aaruthiru

வவுனியா பல்கலையில் தமிழ்மொழி மூலம் கற்கும் மாணவர்களுக்கு உரிய முறையில் பயன் கிடைக்க வேண்டும் – கலாநிதி ஆறு திருமுருகன்

November 18, 2025

வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலமான பட்டப்படிப்புத் துறைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி