பேரிடலில் பாதிக்கப்பட்ட தொடருந்து பாதைகளை மீளமைக்க வெளிநாட்டு தொடருந்து பொறியியல் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பேரிடர் மீட்பு நிறுவனங்களிடமிருந்து உடனடியாக உதவி பெறுமாறு இலங்கை தொடருந்து நிலைய அதிபர் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜெயசேகர ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோட்டுக் கொண்டுள்ளார்.
பாதைகள் மறுசீரமைப்பு, அணைகளை உறுதிப்படுத்துதல், பாலங்கள் மறுசீரமைப்பு மற்றும் சமிக்ஞை மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை மீண்டும் செயல்படுத்துவதற்கு வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவம், மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் விரைவான பயன்பாட்டு திறன்கள் அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.