புலிகளுக்கு நிதி வழங்கிய மஹிந்த: போர் இரகசியங்களை அம்பலப்படுத்தும் பொன்சேகா!

” 2005 இல் புலிகளுக்கு நிதி வழங்கியமை மற்றும் 2009 இல் வழங்கப்பட்ட 48 மணிநேர போர் நிறுத்தம் உள்ளிட்ட தேசத்துரோக செயல்களுக்கு மஹிந்த ராஜபக்ச பொறுப்பு கூறி ஆக வேண்டும்.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (11) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” 2005 ஜனாதிபதி தேர்தலில் வெல்வதற்காக மஹிந்த ராஜபக்ச புலிகளுக்கு நிதி வழங்கினார் என்ற விடயம் 2010 ஆம் ஆண்டிலேயே வெளிப்படுத்தப்பட்டது. எனினும், இது பற்றி எனக்கு 2008 ஆம் ஆண்டிலேயே தெரியவந்தது. பஸில் ராஜபக்சவுடன் நடந்த சந்திப்பொன்றின்போது அது பற்றி அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.

புலிகளுக்கு இவ்வாறு 2 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது தேசத்துரோக செயல் இல்லையா? இந்த பணத்தை பயன்படுத்தியே கடற்புலிகளுக்கு படகுகள் வாங்கப்பட்டன. அவற்றை பயன்படுத்தியே 4 ஆம் கட்ட ஈழப்போரின்போது தாக்குதல் நடத்தப்பட்டது. எமது கடற்படையின் 10 கப்பல்கள்வரை அழிக்கப்பட்டன.

கடற்படையினரும் உயிரிழந்தனர். எமது கடற்படையினருக்கு மஹிந்த ராஜபக்ச இழைத்த துரோகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

அதேபோல 2009 இல் 48 மணிநேர போர் நிறுத்தத்தை மஹிந்த வழங்கினார்.

இதனால் படையினருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மார்ச் மாதம் முடியவிருந்த போர் மே மாதம் வரை நீடித்தது. ஆயுத இழப்பும் ஏற்பட்டது. இதற்கும் மஹிந்த ராஜபக்ச பொறுப்பு கூறவேண்டும்.” – எனவும் பொன்சேகா வலியுறுத்தினார்.

55

இலங்கை சுற்றுலாத் துறையில் மைல்கல்: இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கைக் கடந்தது

November 17, 2025

2025 ஆம் ஆண்டுக்கான இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை இலக்கை மீறி, இலங்கை சுற்றுலாத் துறை இன்று (17)

2

உள்ளூர் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம்!

November 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17)

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை