புன்னைச்சோலையில் நிவாரணம் வழங்கவும் கிராம உத்தியோகத்தரை இடமாற்றவும் கோரிப் போராட்டம்!

மட்டக்களப்பு, புன்னைச்சோலை கிராம சேவகர் பிரிவில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், கிராம உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக்கோரியும் பொதுமக்கள் நேற்று (15) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, குறித்த கோரிக்கைகள் மற்றும் பாதிப்பின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் புன்னைச்சோலை கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணமோ அல்லது நிதியுதவியோ வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, பாதிக்கப்பட்ட மக்கள் புன்னைச்சோலை பகுதியில் ஒன்று திரண்டனர்.

நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்றுகூடி, கிராம உத்தியோகத்தரை இடமாற்றுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் கோரி ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்தனர். இப்பேரணியானது மாமாங்கம் ஆலய வீதி, பார் வீதி, அரசடி சுற்றுவட்டம் மற்றும் நகர் மணிக்கூட்டுக் கோபுரம் வழியாகச் சென்று இறுதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அடைந்து முற்றுகையிட்டது.

இவ்விடத்திற்கு விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். கிராம உத்தியோகத்தர் தொடர்பான புகார்கள் குறித்தும், நிவாரணம் தொடர்பாகவும் தீர்க்கமான விசாரணை செய்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அவர் வாக்குறுதி அளித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் க. பிரபு,

“தாம் பாதிக்கப்பட்டபோது கிராம உத்தியோகத்தர் தங்களைப் பார்வையிடவில்லை எனவும், அதனால் வெள்ள நிவாரணம் மற்றும் அரசாங்கக் கொடுப்பனவுகள் தமக்குச் சரியாகக் கிடைக்கவில்லை எனவும் மக்கள் முறையிட்டனர். எனவே, அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்போம். நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் குறித்தும் பரிசீலனை செய்து உரியவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வெகு விரைவில் ஏற்பாடு செய்வோம்” என தெரிவித்தார்.

மேலும், கிராம உத்தியோகத்தர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, அவரது செயல்பாடு தவறாக இருக்கும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளதை நாங்கள் அவதானித்துள்ளோம். கடந்த காலத்தில் மக்களின் நிதியை வீணடித்தவர்கள் மற்றும் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளுடன் தொடர்புடையவர்கள் மக்களைத் தூண்டிவிட்டு இதுபோன்ற விஷமத்தனமான செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.

உண்மையில் ஆர்ப்பாட்டத்தின் ஊடாகத்தான் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேவையில்லை. நேரடியாக நீங்கள் பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகளை முன்வைத்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதுவும் முடியவில்லை என்றால் அரசாங்க அதிபர் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதுவும் இயலாவிடின் என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். அரசாங்கம் என்ற ரீதியில் நான் உரிய நடவடிக்கை எடுப்பேன்” எனத் தெரிவித்தார்.

thad

மொன்றியல் புறநகர்ப் பகுதியில் புதியவகை தட்டம்மை நோய் பரவல்…

December 16, 2025

மொன்றியலுக்கு வெளியே உள்ள செயிண்ட்-யுஸ்டாச் (Saint-Eustache) புறநகர்ப் பகுதியில், ஒரு புதியவகை தட்டம்மை (Measles) நோய்ப் பரவலை, கியூபெக் பொதுச்

qu

பள்ளிகளில் நிலவும் வன்முறை நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு கியூபெக்கின் ஆசிரியர் தொழிற்சங்கம் அறிவிப்பு

December 16, 2025

கியூபெக் மாநிலப் பள்ளிகளில் நிலவும் வன்முறை நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு, கியூபெக்கின் ஆசிரியர்கள் தொழிற்சங்கம் (Fédération autonome de

mahes sena

சஜித் பிரேமதாஸவின் நிவாரணப் பணிகளுக்கு அவதூறு செய்து அரசியல் இலாபம் தேடுவதை நிறுத்துங்கள் – ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்

December 16, 2025

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை வைத்தியசாலைக்கு ரூ. 29 இலட்சம் பெறுமதியான உபகரணங்களை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

inthi

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் – முன்னாள் அமைச்சர் இந்திக்க அநுருத்த

December 16, 2025

வெள்ளம் மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால், வெகு விரைவில் மக்கள் கிளர்ச்சி

pre

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூபாய் 5,000 போஷாக்குக் கொடுப்பனவு

December 16, 2025

சவால்களுக்கு மத்தியிலும், தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காக அரசாங்கம் முதலீடு செய்யும் என்ற உறுதியுடன், டிசம்பர் மாதத்திற்கான கர்ப்பிணித் தாய்மார்களுக்கான

au

 ஆஸ்திரேலிய தாக்குதல்; பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும் மகனும் குற்றவாளிகள்!

December 16, 2025

ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 16 ஆக அதிகரித்துள்ளது. யூதர்களுக்கு எதிரான இந்தத்

manda

ஊர்காவற்றுறை நீதிமன்றில் மண்டைதீவு புதைகுழி வழக்கு

December 16, 2025

மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கை இன்று (16.12.2025) ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்

weat

மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

December 16, 2025

கிழக்கிலிருந்து அடித்த ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும்

ti

டிக்டோக் நட்பு: இளம் பெண் கூட்டு வன்முறை: திருமலையில் சம்பவம்

December 16, 2025

திருகோணமலையில் சமூக ஊடகமான டிக்டோக் மூலம் அடையாளம் காணப்பட்ட 24 வயது திருமணமான பெண்ணை கூட்டு பாலியல் ரீதியான துன்புறுத்தலில்

abu

சூறாவளிக்குப் பிறகு குழந்தைகளை கடத்தல், சுரண்டல் அதிகரிப்பு

December 16, 2025

டித்வா சூறாவளிக்குப் பிறகு, குழந்தைகள் கடத்தல் மற்றும் சுரண்டலுக்கான சில கூறுகளின் முயற்சிகள் அதிகரித்து வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள்

arrest

ஐரோப்பா செல்ல முயன்ற இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

December 16, 2025

போலி ஆவணங்களுடன் ஐரோப்பா செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஓமான்

mex

சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி 7 பேர் பலி

December 16, 2025

மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் ஏழு பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய