புதிய சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வது குறித்த விவாதங்கள்

புதிய சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வது குறித்த விவாதங்கள் தோற்றுவிக்கப்பட்டிருப்பதானது, அச்சட்டத்தின் பிரயோகத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எவரேனும் மேற்கொண்டிருக்கும் முயற்சியின் ஓரங்கமா என்ற கேள்வி எழுவதாக சுட்டிக்காட்டியிருக்கும் சர்வ ஜன நீதி அமைப்பு, பயங்கரவாதத்தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்படவேண்டும் எனவும், தற்போது புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்டவரைவைத் தாம் முற்றாக எதிர்ப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும் எனவும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவு வாபஸ் பெறப்படவேண்டும் எனவும் வலியுறுத்தி பேராசிரியர் ஜயதேவ உடன்கொட, ஜனாதிபதி சட்டத்தரணிகளான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன மற்றும் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, சட்டத்தரணிகளான ஏ.எம்.பாயிஸ், பவானி பொன்சேகா, ஏர்மிஸா ரீகல், நதீஷானி பெரேரா, ஜெருஷா குரொசெற் தம்பையா, ரவிந்திரன் நிலோஷன் மற்றும் பெனிஸ்லஸ் துஷான் ஆகியோரின் கையெழுத்துடன் சர்வ ஜன நீதி அமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அதனை புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவின் ஊடாகப் பதிலீடு செய்தல் என்பன தொடர்பில் வாத, பிரதிவாதங்கள் உருவாகியுள்ளன. இந்நிலையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக அரசாங்கம் அளித்த அதன் தேர்தல் வாக்குறுதியை நாம் கேள்விக்குட்படுத்த விரும்புகின்றோம்.

இச்சட்டமானது சுமார் நான்கு தசாப்தகாலமாக மிகமோசமான மீறல்களின்போது தண்டனைகளிலிருந்து விடுபடும் கலாசாரம் மேலோங்குவதற்குப் பங்களிப்புச் செய்வதுடன், அதனைப் பதிலீடு செய்யும் வகையில் கொண்டுவரப்படும் எந்தவொரு சட்டமும் அந்நிலை தொடர்வதற்கு இடமளிக்கும் என்ற அச்சம் நிலவுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டவரைவை நாம் முற்றாக எதிர்ப்பதுடன், பயங்கரவாதத்தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்படவேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என பல தசாப்தகாலமாக முன்வைக்கப்பட்டுவந்த கோரிக்கைக்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு உருவான அரகலய மக்கள் எழுச்சிப்போராட்டத்துடன் மேலும் ஆதரவு பெருகியது. அவ்வேளையில் இக்கோரிக்கைக்கு தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களும் ஆதரவளித்தனர்.

ஆனால் அவர்கள் ஆட்சிபீடமேறியதன் பின்னர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் என்பதிலிருந்து அதனைப் பிறிதொரு சட்டத்தின் ஊடாகப் பதிலீடு செய்தல் என்பதை நோக்கி நகர்வதானது பெரிதும் அதிருப்தி அளிக்கின்றது. அதுமாத்திரமன்றி புதிய சட்டத்தின் ஊடாக அதனைப் பதிலீடு செய்வது குறித்த விவாதங்கள் தோற்றுவிக்கப்பட்டிருப்பது, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எவரேனும் மேற்கொண்டிருக்கும் முயற்சியின் ஓரங்கமா என்ற கேள்வியும் எழுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படும் வரை, அச்சட்டத்தின் பிரயோகம் உடனடியாக இடைநிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்துகின்றோம். அத்தோடு மனித உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்தி, ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கான நேர்மையான தன்முனைப்பை வெளிக்காட்டுமாறு ஜனாதிபதி, அரசாங்கம், எதிர்க்கட்சி உள்ளிட்ட சகல அரசியல் தரப்புக்களிடமும் கோருகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய

de

கிளங்கன் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு!

March 3, 2026

டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால்