புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பது அறிவிப்பு

இயற்கை அனர்த்தங்களினால் புகையிரத திணைக்கள சொத்துகளுக்கு 300 மில்லியன் டொலர் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்துக்கான புகையிரத சேவையை எப்போது மீள ஆரம்பிப்பது என்று குறிப்பிட முடியாது. அந்தளவுக்கு புகையிரத பாதைகள் சேதமடைந்துள்ளன என்று புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்தார்.

நாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த புகையிரத பாதைகள், பாலங்கள் தற்போது புனரமைக்கப்படுவது தொடர்பில் குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகிய இயற்கை அனர்த்தங்களினால் சகல பிரதேசங்களுக்குமான புகையிரத பாதைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன.

புகையிரத சேவைகள் தற்போது வரையறுக்கப்பட்ட வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. றம்புக்கனை, பொல்காஹெவல ஆகிய பகுதிகளின் புகையிரத பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இந்த பகுதிகளுக்கான அலுவலக புகையிரத சேவைகள் புதன்கிழமை (10) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்துக்கான புகையிரத சேவை எப்போது மீள ஆரம்பிக்கப்படும் என்று குறிப்பிட முடியாது. மலையகத்துக்கான புகையிரத பாதைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. குறிப்பாக மாத்தளை – கண்டி புகையிரத பாதைகள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன.

மலையக புகையிரத பாதைகள் மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பீடுவதற்கு இன்று 2 மாதங்களேனும் செல்லும். மணிசரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஒருசில பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது.

இயற்கை அனர்த்தங்களினால் புகையிரத திணைக்கள சொத்துகளுக்கு (பாலம், வீதிகள், சமிஞ்சை கட்டமைப்பு, புகையிரத நிலையங்கள்) 300 மில்லியன் டொலர் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளது. புகையிரத சேவையை இயலுமான வகையில் வழமைக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

as

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

December 12, 2025

வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

photo-collage.png (14)

நாவலர் குருபூஜை நிகழ்வு

December 12, 2025

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதன்கிழமை (10) அன்று நாவலர் குருபூஜை இடம்பெற்றது. கலாசாலை ரதிலஷ்மி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன்

quin

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது தென் ஆபிரிக்கா

December 12, 2025

இந்தியாவுக்கு எதிராக நியூ சண்டிகார் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட்

new

வெற்றியை பதிவு செய்தது நியூஸிலாந்து

December 12, 2025

வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (12) நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜேக்கப் டபியின் துல்லியமான

lau

கியூபெக் மாகாணத்தில் பொலிஸ் அதிகாரியால் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்; விசாரணை நடத்த கோரிக்கை

December 12, 2025

கியூபெக் மாகாணத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15 வயதுச் சிறுவன் நூரான் ரெஸாயி (Nooran Rezayi) பொலிஸ் அதிகாரியால் சுட்டுக்

new

ஒட்டாவா நியூ டான் மெடிக்கல் கிளினிக் மீது விசாரணை!

December 12, 2025

ஒட்டாவாவின் சைனாடவுன் (Chinatown) பகுதியில் இயங்கி வரும் நியூ டான் மெடிக்கல் கிளினிக் (New Dawn Medical Clinic) என்ற

mic ma

கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து விலகி ஆளும் லிபரல் கட்சியில் மைக்கேல் மா?

December 12, 2025

கனடா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் (MP) மைக்கேல் மா (Michael Ma)

wfk

உலக கராத்தே சம்மேளனம் புதிய சின்னத’தை வெளியிட்டது

December 12, 2025

உலக கராத்தே சம்மேளனம் புதிய சின்னத்தினை (Logo) புதன்கிழமை (10) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக தேசிய கராத்தே தெரிவுக்குழுவின் தலைவர் அன்ரோ

vyv

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: இந்தியா 234 ஓட்டங்களால் வெற்றி

December 12, 2025

துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற ஏ குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆசிய கிண்ண

mer

முன்னாள் அமைச்சர் மேர்வினுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

December 12, 2025

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, மேலதிக சாட்சி விசாரணைக்காக ஜனவரி

d

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640ஆக அதிகரிப்பு

December 12, 2025

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஊடாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640ஆக அதிகரித்துள்ளது. மேலும், 211 பேரை இதுவரை

mansar

மண்சரிவு அபாய வலயமாக இலங்கையின் 30% நிலப்பரப்பு

December 12, 2025

இலங்கையில் தற்போது 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல்