பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண 2026–2027 நிதியாண்டுக்கான பட்ஜெட்

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் 2026–27 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பட்ஜெட்டில் வரிவிதிப்பு உயர்வுகள், 15,000 பொதுத்துறை பணியிடக் குறைப்புகள், மற்றும் 13 பில்லியன் டொலர் பற்றாக்குறை கணிப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியா அரசின் 2026 பட்ஜெட்டில் பல்வேறு வரி உயர்வுகள், மூலதனத் திட்டங்களில் தாமதங்கள், மற்றும் மூன்று ஆண்டுகளுக்குள் 15,000 பொதுத்துறை வேலைவாய்ப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், நீண்டகாலத்திற்கும் குறிப்பிடத்தக்க நிதிப் பற்றாக்குறைகள் தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்ஜெட் எங்களின் முந்தைய பட்ஜெட்டுகளிலிருந்து மாறுபட்டதாகும் என்று நிதி அமைச்சர் பிரெண்டா பெய்லி (Brenda Bailey) நேற்று செவ்வாய்க்கிழமை சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரையில் தெரிவித்தார்.

அவரது உரையில், அமெரிக்கா விதித்துள்ள வரிவிதிப்புகள் (tariffs) மற்றும் வீட்டு சந்தையின் மந்தநிலை போன்ற சவால்களே மாகாணத்தின் தற்போதைய பொருளாதார நிலைக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டது.

அடுத்த இரு ஆண்டுகளுக்கான பற்றாக்குறைகள் முறையே 12.1 பில்லியன் டொலர் மற்றும் 11.4 பில்லியன் டாலராக இருக்கும் என அரசு கணித்துள்ளது. இதனுடன், மாகாணத்தின் மொத்தக் கடன் அடுத்த மூன்று ஆண்டுகளில் 154 பில்லியன் டொலரிலிருந்து 235 பில்லியன் டொலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ஆழமான செலவுக் குறைப்புகளுடன் கூடிய சிக்கனப் பட்ஜெட்டை (austerity budget) நாங்கள் விரும்புகிறோம் என்று கூறுபவர்கள் உள்ளனர்,” எனக் கூறிய பேலி, மாகாணத்தின் நிகரப் பொறுப்புகளை (net liability) உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) சதவீதமாக கணக்கிட்டு, கனடாவின் பிற மாகாணங்களுடன் ஒப்பிட்டு கடன் உயர்வை நியாயப்படுத்தினார்.

அரசு அறிவித்துள்ள வரி உயர்வுகள் பெரும்பாலும் உயர்ந்த வருமானம் பெறும் குடிமக்களை பாதிக்கும் வகையில் அமையும் என்றும், இதன் மூலம் சராசரியாக ஆண்டுக்கு 76 டொலர் கூடுதல் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதிப்பீட்டில் 3 மில்லியன் டொலரை மீறும் வீடுகளுக்கான மாகாண சொத்துவரியின் (School Tax) பகுதி உயர்த்தப்படும். அதனுடன், காலியாக உள்ள அல்லது ஊக முதலீட்டிற்காக வைத்திருக்கும் சொத்துகளுக்கு விதிக்கப்படும் speculation and vacancy tax மூன்று சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு