பிரதமரின் செயலாளரின் கணவன் எனக் கூறி மோசடி செய்ய முற்பட்டவர் கைது

ரதமர் ஹரிணி அமரசூரியவின் தனிப்பட்ட செயலாளரின் கணவர் எனத் தன்னைக் காட்டிக்கொண்டு, கொழும்பு – பொரள்ளை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இரு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள முயன்ற சந்தேக நபர் ஒருவரை, கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் பொரள்ளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தன்னை இலங்கை விமானப்படையின் ‘விங் கமாண்டர்’ (Wing Commander) எனப் பொய் கூறி பாடசாலை அதிபரை அணுகியுள்ளார். கடந்த சுதந்திரத் தின விழாவின்போது தான் வானில் இருந்து பாராசூட் மூலம் குதித்ததாகவும் கூறி அதிபரின் நம்பிக்கையை வெல்ல முயற்சி செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், விமானப்படை அதிகாரிகள் மற்றும் பிரதமரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றும் தனது மனைவி எனக் கூறி, ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களைச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கி அவற்றை அதிபரிடம் காண்பித்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் (UDA) வீடுகள் தேவைப்படுபவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக ஐந்து வீடுகள் தனது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு வீடுகளை அதிபருக்குப் பெற்றுத் தருவதாகவும் கூறி அதற்கான விண்ணப்பப் படிவங்களையும் சந்தேக நபர் அதிபரிடம் வழங்கியுள்ளார்.

எனினும், குறித்த நபர் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் பாடசாலை அதிபர் இது குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில், அத்தகைய பெயரில் தனிப்பட்ட செயலாளர் எவரும் அங்கு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு தெற்குப் பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஷான் சூரியபண்டாரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இதற்கு முன்னரும் போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானவர் என்பதும், அவர் மீது சுமார் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கொழும்பு தெற்குப் பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஷான் சூரியபண்டாரவின் ஆலோசனையின் பேரில், கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் பிரியந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை