பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவு

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் நேற்று (17) உத்தரவு விடுத்துள்ளது.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராம சேவகர் ஒருவர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தன்னைத் தாக்கியதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் இந்தப் உத்தரவை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனிடம் வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்:

“கிளிநொச்சி பொலிஸார் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதை அறிந்து, எனது சட்டத்தரணி ஊடாக அந்த வழக்கு தொடர்பான முன்நகர்த்தல் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். அந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பொலிஸார் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவித்த நீதிமன்றம், பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம் வழங்குமாறு எனக்கு உத்தரவு விடுத்தது. நான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னரே பிணையில் விடுவிக்கப்பட்டதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

jana

உத்தியோகப்பூர்வ இல்லங்களில் இருந்து வெளியேற வேண்டுமென்ற சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு

December 18, 2025

பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருக்கும் உத்தியோகப்பூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறுமாறு பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு

lan

யாழ்.மாநகரசபை காணியை அபகரித்தவர் அகப்பட்டார்!

December 18, 2025

யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான காணியை தனிநபர் ஒருவர் தனதாக்கிக் கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, குறித்த பகுதிக்கு இன்றையதினம்(18.12.2025)மாநகரசபை முதல்வர் மதிவதனி

sana

இலங்கையின் வளர்ச்சிக்கு சர்வதேச சுற்றுலாப்பயணிகள் உதவ வேண்டும் – சங்கக்கார

December 18, 2025

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் வளர்ச்சிக்கு சர்வதேச சுற்றுலாப்பயணிகள் உதவ வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார

metr

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

December 18, 2025

அடுத்து வரும் 36 மணி நேரத்தில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடுத்த

elon

முதலிடத்தில் எலான் மஸ்க்!

December 18, 2025

600 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துமதிப்பை தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான்

bri

‘உலகளாவிய கிளர்ச்சி’ முழக்கத்தை எழுப்புபவர்களுக்கு பிரித்தானியா எச்சரிக்கை

December 18, 2025

பிரித்தானியாவின் லண்டன் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் நகர பொலிஸார், ‘இன்டிபாடா’ (Intifada – உலகளாவிய கிளர்ச்சி) என்ற முழக்கத்தை எழுப்புபவர்கள்

navee

சிட்னி தாக்குதல் பயங்கரவாதி கோமாவில் இருந்து மீண்டார்!

December 18, 2025

ஆஸ்திரேலியாவில், ‘ஹனுக்கா’ நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி கோமாவில் இருந்து மீண்ட நிலையில், அவர் மீது கொலை உள்ளிட்ட 59

in ru

ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவுக்கு கோரிக்கை

December 18, 2025

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தவறான பாதையில் செல்வதை இந்தியா எடுத்துச் சொல்ல வேண்டும் எஸ்தோனியா கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா –

put

ஐரோப்பாவை கடுமையாக எச்சரிக்கும் புடின்

December 18, 2025

உக்ரைன் விவகாரத்தில் எவ்வித விட்டுக் கொடுப்புக்களுக்கும் தயாரில்லை எனவும் நிலங்களை பலவந்தமாக கைப்பற்ற தயங்கப் போவதில்லை எனவும் ரஷ்ய ஜனாதிபதி

sim

சிம்பு -ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி?

December 18, 2025

சிலம்பரசன் தற்சமயம் தனது 49 ஆவது திரைப்படமான அரசன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். தற்போது

pac

திரைப்பட விருதிற்கான நடுவர் குழு தெரிவு

December 18, 2025

திரைப்படத் துறையில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அவர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு தனியார் அமைப்புகள்

raja

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’

December 18, 2025

நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தி ராஜா சாப்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சஹானா சஹானா’ எனும்