பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திட்டமிட்ட நிதி நிவாரணம் அறிவித்தது போன்றே வழங்கப்பட வேண்டும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள நிதி நிவாரணப்பொதி மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அவை அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வழங்கிய வாக்குறுதிகளை மீறாது அவற்றை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள நிதி நிவாரணப்பொதி மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அவை அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம். அனர்த்த முகாமைத்துவத்துக்காக வேண்டியளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள போதிலும், அது குறித்த எந்தவொரு சுற்று நிரூபமும் வெளியிடப்படவில்லை. எனவே வழங்கிய வாக்குறுதிகளை மீறாது அவ்வாறே நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்காக எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்காகவும் எதிர்காலத்தில் எமது ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என நாம் உறுதியளிக்கின்றோம். மக்களைப் போன்றே பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வர்த்தக சமூகத்தினருக்கும் திறைசேரியூடாக வட்டியற்ற கடன் வழங்கப்பட வேண்டும்.

பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும். அளர்த்த முகாமைத்துவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தற்போது அனர்த்தத்துக்கு பிந்திய நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இந்த அரசாங்கம் தவறியுள்ளது.

வெள்ளம் வழிந்தோடிய பிரதேசங்களில் அவற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் கூட முறையாக முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் பிரதி அமைச்சரொருவர் எதிர்க்கட்சியினருக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் எனக் கூறுகின்றார். அந்த பிரதி அமைச்சர் இன்னும் தன்னை எதிர்க்கட்சி எம்.பி. என நினைத்துக் கொண்டிருக்கின்றார். அவர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் என்பதை நினைவுபடுத்துகின்றோம்.

உட்கட்டமைப்பு சேதங்கள் மாத்திரம் 900 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான நிதி இன்னும் கிடைக்கவில்லை என்றே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. 1000 மில்லியன் ரூபா நிதி சேகரிப்பிற்கான திட்டமிடல்களை இதற்கு முன்னரே நாம் சமரப்பித்திருக்கின்றோம். இப்போதாவது அதனை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

By C.G.Prashanthan

red

மூன்றாம் நிலை சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

December 10, 2025

நாட்டின் நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட ‘நிலை-3’ சிவப்பு மண்சரிவு வெளியேற்ற எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய கட்டிடம்

man

பருவமழை; மன்னாருக்கு முன்னெச்சரிக்கை

December 10, 2025

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை சற்றுமுன் விடுத்துள்ளது.

un

மீட்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது

December 10, 2025

இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபை மத்திய அவசரகால மீட்பு நிதியிலிருந்து (CERF) 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை

jan

பேரிடர் தயார்படுத்தலிலும் பதில் செயல்பாட்டிலும் இருந்து வரும் குறைபாடுகளை ஒப்புக்கொண்டார் ஜனாதிபதி

December 10, 2025

நாட்டின் பேரிடர் தயார்படுத்தலிலும் பதில் செயல்பாட்டிலும் இருந்து வரும் நீண்டகால குறைபாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார். இந்திய ஊடகம்

wat

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளைஞர் குளத்தில் மூழ்கி பலி!

December 10, 2025

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பில் உள்ள குளம் ஒன்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த இளைஞர் ஒருவர் குளத்தில் மூழ்கி

mari

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திட்டமிட்ட நிதி நிவாரணம் அறிவித்தது போன்றே வழங்கப்பட வேண்டும்

December 10, 2025

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள நிதி நிவாரணப்பொதி மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அவை அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வழங்கிய வாக்குறுதிகளை

sou

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தென் கொரியாவிலுள்ள இலங்கையர்கள் நன்கொடை

December 10, 2025

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபா பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக

kos

71 குடும்பங்கள் வெளியேற்றம்

December 10, 2025

மஸ்கெலியா, மறே தேயிலை தோட்டத்தின் கெடஸ் பிரிவில் வசிக்கும் 71 குடும்பங்களைச் சேர்ந்த 311 உறுப்பினர்கள் அப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை (08)

jail

பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து திருடிய 12 பேர் கைது

December 10, 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து சொத்துக்களை சூறையாடியதாகக் கூறப்படும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்

ila

இளநீர் வெட்டும் கத்தியால் குத்தி, இளைஞன் கொலை

December 10, 2025

இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கணினி பொறியாளர்

fr

ஜனாதிபதியின் செயலாளருடன் பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு

December 10, 2025

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லேம்பெர்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

wo

பொதுமக்கள் மோசடிச் செய்திகளால் ஏமாற வேண்டாம்

December 10, 2025

பேரிடருக்குப் பிந்தைய நிவாரண செயற்பாடுகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கும் பணியானது, அமைச்சுடன் இணைந்த கள அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்களின்