பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்; உலக வங்கிப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணk;; உலக வங்கிப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உலக வங்கிப் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.

டித்வா சூறாவளி புயல் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட கடுமையான பேரிடர் நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் உலக வங்கியின் இலங்கை பிரதிநிதிகள் குழுவுடனான விசேட சந்திப்பொன்று இன்று (02) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப் பிரதிநிதி கிவோர்க் சார்கஸ்ஜான் (Gevorg Sargsyan) மற்றும் உலக வங்கியின் சிரேஷ்ட செயற்பாட்டு அதிகாரி திரு. அசேல திசாநாயக்க ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

பேரனர்த்தம் மற்றும் அதன் பிற்பாடு ஏற்பட்டுள்ள அதன் தற்போதைய தாக்கம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கு இங்கு விளக்களித்ததோடு, இதுவரை மனித உயிர்கள், சொத்துக்கள் மற்றும் பெருமளவிலான உட்கட்டமைப்பு வசதிகள் அழிந்து, சேதமடைந்துபோயுள்ள விதம் தொடர்பிலும் எடுத்துக்காட்டினார்.

இதன் பிரகாரம், இந்த உட்கட்டமைப்பு வசதிகளை புனர்நிர்மாணம் செய்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும், அழிந்துபோய்யுள்ள, சேதமடைந்துபோயுள்ள சொத்துக்கள் மற்றும் தொழில்முயற்சிகளை மீண்டும் கட்டியெழுப்பி, மக்களை மீண்டும் தூக்கு விட்டு பக்கபலத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் தேவையான உதவி ஒத்துழைப்புகளை இலங்கைக்குப் பெற்றுத் தருமாறு உலக வங்கி பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

அண்மைய காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வங்குரோத்து நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நுண், சிறிய மற்றும் நடுத்தர முனைவோருக்கு, தொழில்முயற்சியாண்மைகளுக்கு இந்த பேரிடர் சூழ்நிலை மீண்டும் ஒருமுறை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமையினால், இவர்களையும் இவர்களினது தொழில் முயற்சியாண்மைகளையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான உதவுகளை, ஒத்துழைப்புகளை பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் கேட்டுக் கொண்டார்.

By C.G.Prashanthan

po

உதவித் தொகையை அதிகரித்த பிரித்தானியா

December 6, 2025

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள்

veh

வாகன பாவனை தொடர்பில் எச்சரிக்கை

December 6, 2025

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய அல்லது அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை முழு ஆய்வு இல்லாமல் பயன்படுத்த வேண்டாம் என

thera

ஜனாதிபதி – தேரர் சந்திப்பு!

December 6, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (06) முற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து மகாநாட்டில், அதி

pra

நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை

December 6, 2025

வெள்ள நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா கொடுப்பனவில்

dssdvds

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு அபராதம்

December 6, 2025

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம், 1,259 கோடி

pa hi

இந்து மத மாணவியர் பாகிஸ்தான் அரச பள்ளியில் கட்டாய மத மாற்றம்?

December 6, 2025

பாகிஸ்தானில், அரசு பள்ளியில் படிக்கும் இந்து மாணவியர், வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நம்

sa

சிங்கப்பூர் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் போன், வாட்ச்’ பயன்படுத்த கட்டுப்பாடு?

December 6, 2025

சிங்கப்பூரில், பள்ளி நேரங்களில், ‘ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச்’ பயன்படுத்த மாணவர் களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில்

hea

வரலாறு காணாத வகையில் வெளிநாட்டவர் பிரிட்டனிலிருந்து வெளியேற்றம்!

December 6, 2025

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கியிருந்த வெளிநாட்டினர், வரலாறு காணாத வகையில் வெளியேறி வருகின்றனர். அதில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். வேலைக்காகவும்,

fr

பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுக்குள் புகுந்த காரால் 10 பேர் பலி

December 6, 2025

பாரிஸ்: பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

dol

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

December 6, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான

mod

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

December 6, 2025

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச