நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; தீர்வு கிடைக்காவிடின் நாளை வீதியில் இறங்கி போராட தயார் – சிறைச்சாலை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் சங்கம் எச்சரிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்;கு உடனடி தீர்வு கிடைக்காவிடின், நாளை கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் உறவினர்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராடத் தயாராக இருப்பதாக சிறைக்கைதிகள் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறைச்சாலை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் சங்கத்தின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சிறைக்கைதிகள் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்; சுதேஷ் நந்திமால் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அண்மைய மோதல் சம்பவமானது தற்செயலாக நடந்தது ஒன்றல்ல. சிறைச்சாலைகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான எண்ணிக்கையில் 1/4 பங்கு உத்தியோகஸ்தர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். 650 பேர் மட்டுமே இருக்க வேண்டிய இடத்தில் 2000 இற்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 250 முதல் 300 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதால், கைதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகிய இருதரப்பும் பாரிய மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்தத் தீவிர அழுத்தமே நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் ஏற்படுவதற்கு பிரதான காரணமாகும். இந்த நிலைமையில் சிறை அதிகாரிகளோ அல்லது கைதிகளோ தன்னிச்சையாக மோதிக்கொள்ளவில்லை. அரசாங்கம் ஏற்படுத்திய நெருக்கடியே இவர்களை மோதவிட்டுள்ளது.

இந்த மோதல்களில் கைதிகள் மட்டுமன்றி சிறை உத்தியோகஸ்தர்கள் சிலரும் உயிரிழந்துள்ளனர். சிறைக்குள் நிலவும் அதிக நெரிசலால் பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏற்கனவே 5 பெண் கைதிகள் உயிரிழந்துள்ளனர். முறையான மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகள் இல்லாத காரணத்தினாலேயே பெண் கைதிகள் சிறைக்குள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். பெண் கைதியொருவர் மருத்துவப் பரிசோதனைக் கருவியைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு குறியீட்டு ரீதியாகப் போராடியதன் மூலம் சிறைச்சாலைகளின் சுகாதாரப் பேரழிவு அம்பலமாகியுள்ளது.

தற்போது சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களாவர். காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தால் வீதியில் செல்வோர் மீதும் போதைப்பொருள் திணிக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு சிறைக்கூண்டுகளை விடுத்து, விஞ்ஞானபூர்வமான புனர்வாழ்வுத் திட்டமே அவசியமாகும். மேலும், இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கை வராமல் பல கைதிகள் 2 வருடங்களுக்கும் மேலாக சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களத்திலும் பல கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பலப் பேர் உயிரிழந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் உறவினர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன. கைதிகளைப் பார்க்க ஒரு வாரம் காத்திருக்குமாறு கூறியதால் ஏற்பட்ட பதற்றத்தில், காவல்துறையினர் உறவினர்களை அடித்து விரட்டியுள்ளனர். உள்ளே இருக்கும் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் வெளியில் பெற்றோர் கதறுகின்றனர்.

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக்கப்பட்டு, மேல்முறையீட்டில் விடுதலையான அதிகாரிக்கு இந்த அரசாங்கத்தின் அமைச்சர் விருது வழங்கிப் பாராட்டியுள்ளார். தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது ‘சிறைக்குள் நடக்கும் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு’ எனக் கூறியதை நினைவூட்ட விரும்புகிறோம். எனவே இந்த மரணங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

இதற்குள் ஏதேனும் அரசியல் சதித்திட்டம் இருக்கிறதா என அரசாங்கம் ஆராய வேண்டும். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் போன்ற சம்பவங்களுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு வழங்காவிட்டால், கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் உறவினர்களைத் திரட்டி நாளை வீதியில் இறங்கிப் போராட தயார் என்றார்

b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து

thal

தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

September 13, 2026

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை