நிலுவையில் உள்ள நியமனங்களை வழங்க வேண்டாம் – தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்

இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் நான்கு பதவிகளுக்கான நிலுவையில் உள்ள நியமனங்களை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் மேலும்,

இந்த அலுவலுவகம் உத்தேசமாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர் இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் ஒரு பொறிமுறை எனப் பொதுவாகக் கூறப்படுகின்றது.

பெரும்பாலும் நாட்டின் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட மீறல்களுக்கு ஈடுசெய்யும் வகையில் இழப்பீடுகள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. தமிழ் மக்கள் எந்தவொரு உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறையையும் அல்லது நல்லிணக்கத்தையும் நிராகரித்து வருகின்றனர்.

ஏனெனில், இந்த நிறுவனங்களின் நியாயமான செயற்பாட்டிலோ சுயாதீனத்தன்மையிலோ அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்தச் சூழ்நிலையில்தான் மேலே குறிப்பிடப்பட்ட அலுவகத்தைச் சார்ந்த மிகவும் கரிசனைக்குரிய ஒரு பிரச்சினையைச் சுட்டிக்காட்ட இந்தக் கடிதம் எழுதப்படுகின்றது.

பாதுகாப்புத் துறை பின்னணி கொண்ட எந்தவொரு நபரும் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதால், எங்கள் மக்கள் இத்தனை நாட்களாகக் கூறி வந்ததும், அரசின் மனப்பான்மையையும் உறுதிப்படுத்தும் நிலை உருவாகும். சமீபத்தில் இழப்பீடு செய்யும் அலுவகத்துக்கு நான்கு பெயர்கள் நியமனத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது.

இதில் இருவர் பாதுகாப்புத் துறை பின்னணி கொண்டவர்கள். இதற்கு மேலாக, ஐந்தாவது உறுப்பினர் மேஜர் ஜெனரல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, வசந்தா பெரேரா (முன்னர் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்) மற்றும் ஜோசப் டெரன்ஸ் ஞானநந்தன் சுந்தரம் ஆகியோர் நியமிக்கப்படின், ஐந்து உறுப்பினர்களில் மூவர் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பர். இத்தகைய அலுவகத்திற்கு ஒருவரும் அந்தத் துறையில் இருந்து வரக்கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு.

2025 நவம்பர் 5 அன்று வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு ஒருமனதாக தீர்மானித்து, தங்களுக்கு வசந்தா பெரேரா மற்றும் ஜோசப் டெரன்ஸ் ஞானநந்தன் சுந்தரம் ஆகியோரையும் இழப்பீடு செய்யும் அலுவகத்திற்கு நியமிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி எழுத ஒருமனதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளோம் – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

tab

மருந்துகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை – வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம

November 18, 2025

சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் சுமார் 350

wea

தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது…

November 18, 2025

இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து

senthoora

புத்தர் சிலை விவகாரம்; திருகோணமலையில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் திட்டமிட்டவை – இராவண சேனா தலைவர்

November 18, 2025

திருகோணமலையில் நடைபெறும் அசம்பாவிதங்கள் பல தரப்புக்களால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது என இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன் தெரிவித்தார். திருகோணமலை

boa

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவு

November 18, 2025

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை

mav

கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்

November 18, 2025

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்த வாரம் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அங்கு சிரமதானப்

Death-2

துப்பாக்கிச் சூட்டில்; படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு

November 18, 2025

மீட்டியாகொடவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இன்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 45 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை

v

வனவளத் திணைக்களம் பயிர் நிலங்களை சேதப்படுத்துகின்றது!

November 18, 2025

வவுனியா, கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியில் மக்களின் நெற்காணிகளை வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதுடன்,நெற்பயிரை சேதப்படுத்தி தேக்கு மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு

ar

புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி வந்த லொறி தடம்புரண்டு விபத்து

November 18, 2025

வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகனம், ஜங்கன்குளம் பகுதியில் உள்ள வளைவில்

cha

பொதுநலவாய சதுரங்கப் போட்டி; இலங்கைக்கு 09 பதக்கங்கள்

November 18, 2025

மலேசியாவில் நடைபெற்ற பொதுநலவாய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணி 09 பதக்கங்களை வென்றுள்ளது. அதற்கமைய, 03 தங்கப்

ey

இலங்கையில் பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்

November 18, 2025

உலகின் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்கி

aa

ஏஎவ்சி ஆசிய கிண்ண 2ஆம் கட்ட கால்பந்தாட்டப் போட்டி

November 18, 2025

தாய்லாந்துக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெறவுள்ள ஏஎவ்சி ஆசிய கிண்ண 3ஆம் சுற்று தகுதிகாண் 2ஆம் கட்ட (2nd

tam

நாளை இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியை சந்திக்கிறது!

November 18, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) பிற்பகல் ஒருமணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான