நிலக்கரி கொள்வனவு முறைகேடு: மின்சார சபைக்கு 7,672 மில்லியன் ரூபா நேரடி நட்டம்!

தரம் குறைந்த நிலக்கரியால் மின்சார சபைக்கு 7,672 மில்லியன் ரூபா நேரடி நட்டம்!
இலங்கை மின்சார சபை, பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பித்துள்ள கடிதத்தின்படி, அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த எட்டு நிலக்கரி கப்பல்களினால் மதிப்பிடப்பட்டுள்ள நேரடி நட்டம் 7,672 மில்லியன் ரூபாவாகும்.

900 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறனைக் கொண்ட நுரைச்சோலை லக்விஜய மின்நிலையம் நிலக்கரி தகனம் மூலமே இயங்குகிறது.

அதற்காக இறக்குமதி செய்யப்பட்ட 8 கப்பல்களின் நிலக்கரி தரமற்றவை என அண்மையில் ஆய்வக பரிசோதனை அறிக்கைகள் மூலம் தெரியவந்ததை அடுத்து சர்ச்சை ஏற்பட்டது.

இவ்வாறான பின்னணியில், இலங்கை மின்சார சபை இது தொடர்பில் பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

இந்த எட்டு கப்பல்களின் தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்படக்கூடிய மதிப்பிடப்பட்ட நேரடி நட்டங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி, முதலாம் கப்பலில் இருந்து 595.1 மில்லியன் ரூபாவும், இரண்டாவது கப்பலில் இருந்து 288.5 மில்லியன் ரூபாவும், மூன்றாவது கப்பலில் இருந்து 1,047.4 மில்லியன் ரூபாவும், நான்காவது கப்பலில் இருந்து 865 மில்லியன் ரூபாவும் நேரடி நட்டம் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஐந்தாவது கப்பலில் இருந்து 1,144.2 மில்லியன் ரூபாவும், ஆறாவது கப்பலில் இருந்து 1,197.7 மில்லியன் ரூபாவும், ஏழாவது கப்பலில் இருந்து 974.9 மில்லியன் ரூபாவும், எட்டாவது கப்பலில் இருந்து 1,559.3 மில்லியன் ரூபாவும் நேரடி நட்டம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த எட்டு கப்பல்களின் தரமற்ற நிலக்கரி மூலம் முன்னெடுக்கப்படும் மின் உற்பத்தியினால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ள நேரடி நட்டம் 7,600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.