நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான அனர்த்த நிலைமை பற்றிய கரிசனையில் ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத்தில் நேரத்தை ஒதுக்காது அரசாங்கம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது என என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்காமை தொடர்பில் எழுந்த சர்ச்சையின் போது தனது கருத்தை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் மூன்று நாட்களுக்கு உரையாற்றுவதற்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் 5ஆம் திகதி வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பை ஒத்திவைக்க முடியாது என்று அரசாங்கம் கூறியதால் கட்சித் தலைவர் என்ற ரீதியில் நானும் ஏனைய கட்சித்தலைவர்களும் 5ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படுமாக இருந்தால் விவாதம் இன்றி அதனை நடத்துவதற்கு இணங்கினோம்.

அதன்படி தற்போதைய நிலவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தை பயன்படுத்துவோம் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம். நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறான நிலைமையில் இன்றைய தினத்தில் நண்பகல் 12.30 மணி வரையில் பாராளுமன்றத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இது முற்றிலும் தவறானது. சுனாமியின் பின்னர் நாங்கள் இங்கேயே அதுபற்றி கலந்துரையாடினோம். இது எங்களின் கடமைகளே. ஆனால் இங்கே இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாட முடியவில்லை என்றால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அல்லது குறைந்தபட்சம் இன்றாவது இது தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பை வழங்க வேண்டும். இந்த பாராளுமன்றத்தின் கடமைகளை ஆளும் தரப்பு மீறியுள்ளது. இதனால் நாங்களும் சபையில் இருந்து வெளியேறுகின்றோம் என்றார்.

po

உதவித் தொகையை அதிகரித்த பிரித்தானியா

December 6, 2025

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள்

veh

வாகன பாவனை தொடர்பில் எச்சரிக்கை

December 6, 2025

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய அல்லது அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை முழு ஆய்வு இல்லாமல் பயன்படுத்த வேண்டாம் என

thera

ஜனாதிபதி – தேரர் சந்திப்பு!

December 6, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (06) முற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து மகாநாட்டில், அதி

pra

நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை

December 6, 2025

வெள்ள நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா கொடுப்பனவில்

dssdvds

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு அபராதம்

December 6, 2025

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம், 1,259 கோடி

pa hi

இந்து மத மாணவியர் பாகிஸ்தான் அரச பள்ளியில் கட்டாய மத மாற்றம்?

December 6, 2025

பாகிஸ்தானில், அரசு பள்ளியில் படிக்கும் இந்து மாணவியர், வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நம்

sa

சிங்கப்பூர் பள்ளிகளில் ‘ஸ்மார்ட் போன், வாட்ச்’ பயன்படுத்த கட்டுப்பாடு?

December 6, 2025

சிங்கப்பூரில், பள்ளி நேரங்களில், ‘ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச்’ பயன்படுத்த மாணவர் களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில்

hea

வரலாறு காணாத வகையில் வெளிநாட்டவர் பிரிட்டனிலிருந்து வெளியேற்றம்!

December 6, 2025

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கியிருந்த வெளிநாட்டினர், வரலாறு காணாத வகையில் வெளியேறி வருகின்றனர். அதில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். வேலைக்காகவும்,

fr

பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுக்குள் புகுந்த காரால் 10 பேர் பலி

December 6, 2025

பாரிஸ்: பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

dol

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

December 6, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான

mod

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

December 6, 2025

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச