நாட்டில் இந்தளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் இதுவரை ஏற்படவில்லை

நாட்டில் இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நாட்டில் ஏற்படவில்லை. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிக்கு என்ன ஆனது? எங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டாலும் அது பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையது எனக் கூறி தப்பிக்க முற்பட வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தற்போதைய அமைச்சர்களும், ஆளுந்தரப்பு எம்.பி.க்களும் தேர்தலுக்கு முன்னர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். அதனைக் கூறியே ஆட்சியையும் கைப்பற்றினர். எதிர்க்கட்சியினருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் கற்பிப்பதாகவும் கூறினர். ஆனால் இவர்கள் ஆட்சியமைத்ததன் பின்னர் தேசிய பாதுகாப்பு எந்த நிலையிலிருக்கின்றது என்பதை நாம் அறிவோம்.

அன்றாடம் இடம்பெற்று வரும் துப்பாக்கிச்சூடுகளால் மக்களின் உயிருக்கு எந்தளவு அச்சுறுத்தல் ஏற்பட்டள்ளது என்பதை நாம் அறிவோம். கடந்த ஒரு வருடத்துக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றுள்ளதோடு, 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வரலாற்றில் முதன்முறையாக பிரதேசசபைத் தலைவர் ஒருவர் தனது அலுவலகத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அதற்கு முன்னர் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குள் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நாட்டில் ஏற்படவில்லை. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிக்கு என்ன ஆனது? எங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டாலும் அது பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையது எனக் கூறி விடுகின்றனர்.

உண்மையிலேயே அந்த சம்பவங்கள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவையாகக் காணப்பட்டாலும், அதற்கான பொறுப்பு கூறலிலிருந்து அரசாங்கத்தால் விலக முடியாது. எனவே குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருப்பதை விடுத்து, இனிவரும் காலங்களை இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய எவரையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கூடாது.

குறிப்பாக இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் எந்தவொரு பொலிஸ்மா அதிபரும் இந்தளவுக்கு அரசியல் மயப்படுத்தப்பட்டவராக இருக்கவில்லை.

அரச அதிகாரியான அவருக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட ரீதியில் அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டிய அவசியமில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக உறுதியாகியுள்ளது. அதற்கு காரணம் பாதாள உலகக் குழுவினருடனான தொடர்பு என பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் கூறுவதைப் போலவே பொலிஸ்மா அதிபரும் எதிர்க்கட்சியினருக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் ஜே.வி.பி.யின் பெலவத்த அலுவலகத்துக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைமையகத்துக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட மேலும் பல மக்கள் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பக்கசார்பான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என்றார்.

Arrest_1

பெரும்பான்மை இன யாழ் பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது

November 17, 2025

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட

wat

மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் மரணம்

November 17, 2025

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன

mu

சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

November 17, 2025

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும்

jup

தென்னாபிரிக்காவுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்?

November 17, 2025

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. முதலாவது போட்டியின்போது கழுத்து உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை

sine

தொழில்முறை டென்னிஸ் சம்பியனான சின்னர்

November 17, 2025

தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பின் இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (16)

pri

18வது ஆண்டாக மீண்டும் பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக்!

November 17, 2025

தொடர்ச்சியாக 18வது ஆண்டாக, சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (பிரிமா குழுமம் இலங்கை) நிறுவனம், பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை

nl

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை புதிய விற்பனை நிலையங்களை திறப்பு

November 17, 2025

நாடு முழுவதும் தங்களது பண்ணை வளாகங்களில் பல புதிய விற்பனை நிலையங்களை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) திறந்துள்ளது.

fs

காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்

November 17, 2025

காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும்

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது

theep

விஜயகாந்த் பட நடிகை: பெரிய வீட்டு மருமகள்?

November 17, 2025

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும்

ma

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

November 17, 2025

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி