நாட்டின் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்கு கொலை மிரட்டல் ; ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சிறைக்கைதிகள் நாட்டின் சட்டரீதியான பராமரிப்பில் உள்ளவர்கள் என்பதால், அவர்களின் பாதுகாப்புக்கு முழுமையான பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும்.

அண்மைக் காலத்தில் நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து அரசாங்கமும் பொறுப்பான அமைச்சர்களும் முன்வைக்கும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவது, கைபேசிகள் பயன்படுத்தப்படுவது மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதே இத்தகைய அசம்பாவிதங்களுக்கு காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இக்கூற்றானது, தங்களது கடமையையும் பொறுப்பையும் அரசாங்கம் சரியாக நிறைவேற்றவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. சிறைச்சாலைச் சுவர்களில் ‘சிறைக்கைதிகளும் மனிதர்களே’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தாலும், சுவர்களுக்குள் மனித உரிமை மீறல்களுமே இடம்பெறுகின்றன.

பாதிக்கப்பட்ட சிறைக்கைதிகளின் குடும்பத்தினரின் தகவல்களைச் சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்கள் கூட அச்சுறுத்தப்படுகின்றனர். அரசாங்கத்தின் கூற்றை மட்டும் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. சிறைக்கைதிகளின் உரிமைகளுக்காகவும் குரலற்றவர்களின் குரலாகவும் செயற்படும் அமைப்புகளை அடக்குமுறை மூலம் முடக்க நினைப்பது ஜனநாயகத்துக்குப் பேரபாயமாகும்.

குறிப்பாக, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளான சிரேஷ்ட சட்டத்தரணி சேனக பெரேரா மற்றும் சுதேஷ் நந்திமால் ஆகியோருக்கு அண்மையில் கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு குழுவின் பெயரைப் பயன்படுத்தி, இந்த விவகாரங்களில் தலையிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடமும் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அச்சுறுத்தல்கள் குறித்து அரசாங்கம் உடனடியாகத் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்ட கலாச்சாரத்தை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் கீழ், மீண்டும் இத்தகைய மிரட்டல்கள் தொடர்வது கவலையளிக்கிறது. சிறைக்கைதிகளின் மனித உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறையிட்டமை அவர்களின் உரிமையாகும். தற்போதைய எதிர்க்கட்சிகள் கூட ஜெனீவா செல்வதாகக் கூறும் போது, சிறைக்கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் சர்வதேச ரீதியில் குரல் கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை.

இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு ஒருபோதும் அச்சப்படாது. இந்த அமைப்பு தனித்து செயற்படவில்லை; அவர்களது அனைத்து நியாயமான போராட்டங்களுக்கும், அவர்கள் எடுக்கும் எந்தவொரு சட்டரீதியான நடவடிக்கைகளுக்கும் நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம். அரசாங்கம் இத்தகைய அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தி, அச்சுறுத்தல் விடுத்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது

velmurugan-CPI

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் த.வெ.க. அரசு!” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

August 24, 2026

ன்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து, மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து விரிவாக்கம் மற்றும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட

hindutamil-prod_2026-08-08_ozeaw6pt_mutharasan

“கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக த.வெ.க. அரசு செயல்படுகிறதா?” – முதலமைச்சருக்கு முத்தரசன் கேள்வி!

August 24, 2026

கும்பகோணம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் முத்தரசன்,

images (9)

“தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்!” – 10,000 ஏரிகள் வறண்டதால் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

August 24, 2026

சென்னை தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் வறண்டுள்ளதைக் சுட்டிக்காட்டி, உடனடியாகத் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க

vck-tvk

“ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாகிறதா த.வெ.க?” – விசிக சரமாரி கேள்வி!

August 24, 2026

சென்னை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஊழல் பின்னணி கொண்டவர்களைத் தங்கள் கட்சியில் இணைத்து வருவதாகக்

images - 2026-08-24T175653.807

“3 கோப்புகளை ஒரு வாரத்திற்குள் முதலமைச்சர் வெளியிட வேண்டும்!” – துரைமுருகன் அதிரடி சவால்!

August 24, 2026

வேலூர் வேலூர் காட்பாடி காந்திநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், த.வெ.க.வினரின் விமர்சனங்களுக்கும், முதலமைச்சர் விஜய்யின்

collage-1755054530

“வகுப்பறை முதல் ஆய்வகம் வரை!” – அரசுப் பள்ளிகளின் ரூ.4,200 கோடி உள்கட்டமைப்புத் தேவைகள் பட்டியல் வெளியீடு!

August 24, 2026

சென்னை அரசுப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுக்கு நிகராகத் தரம் உயர்த்தும் நோக்கில், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்

Ex0nP5VXEAEUsfN

1.69 லட்சம் அரிய ஓலைச்சுவடிகள் மின்பதிவாக்கம்: இந்து சமய அறநிலையத்துறையின் சிறப்பு முயற்சி!

August 24, 2026

மதுரை தமிழகக் கோவில்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட மன்னர் காலக் கொடைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் அடங்கிய அரிய ஓலைச்சுவடிகளை வருங்காலத்

Edappadi-Palaniswami-KA-Sengottaiyan

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் விரைவில் த.வெ.க.வில் இணைவார்கள்!” – அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்புப் பேச்சு!

August 24, 2026

கோபி ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வருவாய்த்துறை

1

“சென்னையில் 750 புதிய மின்சார பஸ்கள்!” – முதலமைச்சர் விஜய் நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்!

August 24, 2026

சென்னை சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், 2-ஆம் கட்டமாக 750 புதிய தாழ்தளக் குளிர்சாதன மின்சாரப் பஸ்கள் (AC

keerthana-xy-2026-08-23-14-35-56

“ரூ.4 கோடிக்கு வீடா? பத்திரத்தைக் காட்டுங்கள், அந்த வீட்டை உங்களுக்கே பரிசாகத் தருகிறேன்!” – அமைச்சர் கீர்த்தனா அதிரடி சவால்!

August 24, 2026

சிவகாசி சிவகாசியில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தான் ரூ.4 கோடிக்கு வீடு