நாட்டின் அனர்த்த முகாமைத்துவ கொள்கையை புதுப்பிக்க வேண்டியது அவசியம் – சஜித் பிரேமதாச

நாட்டின் அனர்த்த முகாமைத்துவ கொள்கையை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாத்தளை மாவட்ட மக்களின் சுக துக்கங்களை ஆராயும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (13) மாத்தளை, ரத்தோட்டை கைகாவல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.

இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாக அமைந்துள்ளது.

எதிர்காலத்தில் அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இயற்கை பேரிடர்கள் மற்றும் அனர்த்தங்கள் நிகழும் போது அவற்றில் இருந்து வரும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இந்தப் பேரிடரின் போது எடுக்கப்பட்டதா இல்லையா என்பது கேள்விக்குறியாகவே இன்றுவரை காணப்படுகின்றன.

வளிமண்டலவியல் திணைக்களமும், வானிலை ஆய்வாளர்களும் கடந்த 11 ஆம் திகதி முதல் வானிலை நிலைமை படிப்படியாக மோசமடைந்து வருவதாக படிமுறை படிமுறையாக நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்து வந்தனர்.

10 நாட்களில் இது புயலாக உருவெடுக்கும் என்றும் முன்னறிவித்தல் விடுத்திருந்தனர். இந்தக் காலகட்டத்தில், மக்களை வெளியேற்றவும், மக்கள் மீது வரும் பாதிப்புகளைக் குறைக்கவும், அனர்த்த முன்னாயத்தத் திட்டங்களை முன்னெடுக்கவும், அனர்த்தங்களால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை, பிரதேசங்களை முறையாக முகாமைத்துவம் செய்வதற்கும் இயலுமை காணப்பட்டிருந்த போதிலும், இதனை எதிர்கொள்வதற்குத் தேவையான இடர் முகாமைத்து திட்டமொன்று இந்த அரசாங்கத்திடம் இருக்கவில்லை.

ஆகையால் நாட்டிற்கு புதிய இடர் முகாமைத்துவ வேலைத்திட்டமொன்று அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புத்தளம் மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் டாப்ளர் ரேடார் கட்டமைப்புகளை நிறுவி, நவீன உபகரணங்களுடன் கூடிய வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடும் திறனும் இயலுமையும் கொண்ட பிராந்திய சர்வதேச மையமாக நமது நாட்டை மாற்ற வேண்டும்.

நாடு சுனாமி மற்றும் சூறாவளிகளால் பாதிக்கப்பட்டன. காலநிலை மாற்றம், சீரற்ற வானிலை காரணமாக பல பாதிப்புகளுக்கு நாம் முகம் கொடுத்துள்ளோம்.

ஆகையால் அனர்த்த முகாமைத்துவ கொள்கையை புதுப்பிக்க வேண்டிய தேவை எமக்கு காணப்படுகின்றன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அதேபோல், அனர்த்த முகாமைத்துவத் துறை ஏனைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்துச் செயற்பட வேண்டும்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சை ஒரு நேரடி அமைச்சை மாற்ற வேண்டும். கீழ் மட்டத்தில் இருந்து அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை நியமித்து, ஆபத்தான பகுதிகளை அடையாளம் கண்டு, வலுவான கட்டமைப்பிற்குள் அமைந்த ஒரு திட்டத்தை வகுத்து முன்னெடுக்க வேண்டும்.

இந்த மோசமான வானிலை குறித்து கடந்த 11 ஆம் திகதி முதல் பல்வேறு கணிப்புகள் மீண்டும் கூறப்பட்டு வந்த நிலையில், அரச பொறிமுறை ஏன் இந்த சூழ்நிலையில் முறையாக நடந்து கொள்ளவில்லை மற்றும் இந்த கணிப்புகளை பொருட்படுத்தாமல் இருந்தது என்பதில் இன்று வரையிலும் பிரச்சினை காணப்படுகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

lax

லக்சபான தேயிலை தொழிற்சாலையின் மீள் புனரமைப்பு பணிகள் தீவிரம்

December 14, 2025

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான மஸ்கெலியா–லக்சபான தேயிலை தொழிற்சாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி நள்ளிரவில் ஏற்பட்ட திடீர்

high

‘தித்வா’ சூறாவளி அனர்த்தத்தில் மக்கள் உயிரிழந்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு ; உயர் நீதிமன்றில் எதிர்க்கட்சிகள் வழக்கு

December 14, 2025

‘தித்வா’ சூறாவளி அனர்த்தத்தில் மக்கள் உயிரிழந்தமைக்கு முன்னெச்சரிக்கைகளை அரசாங்கம் உரிய முறையில் கவனத்தில் கொள்ளத் தவறியதே காரணம் எனக் குற்றம்

van

ஆற்றில் கவிழ்ந்த வேன்

December 14, 2025

வெலிகந்த, கினிதம கிராமத்தில் இருந்து வெலிகந்த நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று இசெட் டீ ஆற்றுக்கு விழுந்துள்ளதுடன்

ell

சுனாமியில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு நிவாரணம் அனுப்பினோம்

December 14, 2025

தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாடு இருந்த காலத்தில் 10-15 லொறிகளில் சுனாமியில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு தாம் நிவாரணம் அனுப்பியதாக

ris

ரிட்ஸ் கார்ல்டன் அதி சொகுசு கப்பல் கொழும்பு வருகை

December 14, 2025

ரிட்ஸ் கார்ல்டன் (Ritz Carlton) வலையமைப்பிற்குச் சொந்தமான அதி சொகுசு கப்பல் ஒன்று, 400 பேருடன் இன்று (14) கொழும்பு

sss

யூத அவுஸ்திரேலியர்கள் மீதான தாக்குதல் தீவிரவாத சம்பவமாக அறிவிப்பு!

December 14, 2025

சிட்னியின் பாண்டி கடற்கரையில் ஒரு யூத ஹனுக்கா கொண்டாட்டம் நடந்தபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, மொத்தம் இரண்டு

19

நிவாரணம் இல்லையாயின் 1904 க்கு அழைக்கவும்

December 14, 2025

நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் அல்லது அத்தியாவசிய சேவைகள் கிடைக்காததில் பொதுமக்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், ‘1904’ என்ற ஹாட்லைன் மூலம்

thesa

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

December 14, 2025

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய (14) தினம் தேசத்தின் குரல் என தமிழ் மக்களால் அழைக்கப்படும் அன்ரன்

kank

காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருவதாக உறுதி!

December 14, 2025

காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ,நாடாளுமன்ற உறுப்பினர்

CEB

நெருக்கடியில் இலங்கை மின்சார சபை!

December 14, 2025

இலங்கை மின்சாரசபை அனர்த்தநிலை காரணமாக சுமார் 20 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும், தடைப்பட்ட மின்சார விநியோகத்தில்

444

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கை வந்த அமெரிக்க மற்றும் இந்திய விமானங்கள் நாட்டை விட்டு புறப்பட்டன!

December 14, 2025

எமது நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு என்பன ஏற்பட்டது இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும்

mano2

பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள “பாதுகாப்பான வதிவிட காணித்தேவை ” மலையக பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட தயார் – மனோ கணேசன்

December 14, 2025

மலைநாட்டில், இந்த பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள, “பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமை கோரிக்கையை அரசுடன் உரையாடி பெற அரசாங்கத்தில்