நவீனப்படுத்தப்படுகின்றது ஒன்டாரியோ மாகாண தகவல் அறியும் உரிமைச் சட்டம்?

ஒன்டாரியோ மாகாண அரசு, தகவல் அறியும் உரிமை (FOI) சட்டத்தை “நவீனப்படுத்தும்” பெயரில் மாற்ற முன்வந்துள்ளது. இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், முதல்வர் டக் ஃபோர்டு மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களின் பதிவுகள் ரகசியமாக வைக்கப்படும். விமர்சகர்கள் கூறுவதாவது, இது அரசியல் செயல்முறைகள் குறித்து பொதுமக்கள் மேற்கொள்ளும் கண்காணிப்பை மிகவும் குறைக்கும் என்ற விமர்சனங்களோடு செய்திகள் வெளியாகியுள்ளன.

பொது மற்றும் வணிக சேவை வழங்கல் மற்றும் கொள்முதல் துறை அமைச்சர் ஸ்டீபன் கிராஃபோர்ட் இதற்கு பதிலளிக்கையில், திறந்த தரவு பட்டியல், ஒழுங்குமுறை அமைப்பின் ஆய்வு, மேலும் எட்டு ஆண்டுகளுக்கு முன் முன்னாள் லிபரல் அரசின் நிதி தகவல்களை வெளியிட்ட நடவடிக்கை ஆகியவற்றை மேற்கோள் காட்டி, தங்களின் அரசு “ஒன்டாரியோ வரலாற்றிலேயே மிகவும் வெளிப்படையான அரசுகளில் ஒன்றாகவே உள்ளது” என்று கூறினார்.

“நாங்கள் வெளிப்படைத்தன்மைக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறோம்,” என்று அவர் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த சட்ட மாற்றங்கள் பின்னோக்கியும் (retroactive) அமல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், கிரீன்பெல்ட் சர்ச்சை மற்றும் ஃபோர்டின் கைப்பேசி பதிவுகள் குறித்து தகவல் பெற முயலும் செய்தி நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் பல வழக்குகள் பாதிக்கப்படக்கூடும். குறிப்பாக, ஃபோர்டின் கைப்பேசி பதிவுகள் தொடர்பான நீதிமன்ற வழக்கும் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த பதிவுகளை வெளியிடுவதைத் தடுக்க அரசு முயற்சி செய்து வருகிறது.

புதிய சட்டம் அமலுக்கு வந்தால், முதல்வர், அமைச்சரவை அமைச்சர்கள், நாடாளுமன்ற உதவியாளர்கள் மற்றும் அவர்களின் அலுவலகங்களின் பதிவுகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இனி வராது. எனினும், அரசுத் துறைகளில் பணிபுரியும் பொது சேவையாளர்களிடம் இருக்கும் பதிவுகளை பொதுமக்கள் தொடர்ந்து கோர முடியும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.

தகவல் மற்றும் தனியுரிமை ஆணையர் பாட்ரிசியா கோஸ்ஸெய்ம், முதல்வரின் கைப்பேசி பதிவுகளை கோரிய குளோபல் நியூஸின் ஆரம்ப கோரிக்கையை ஆதரித்தவர். சட்டத்தை பின்னோக்கி மாற்றுவது, “மேற்பார்வை அமைப்புகள் தடையாக இருந்தால், விதிகளை மாற்றிவிடலாம்” என்ற செய்தியை அனுப்புகிறது என்று அவர் கூறினார்.

“தகவல் அறியும் உரிமைச் சட்டங்கள், அரசு முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன, எந்த அடிப்படையில் எடுக்கப்படுகின்றன, யார் அவற்றில் தாக்கம் செலுத்துகின்றனர், மற்றும் பொது நலன் பாதுகாக்கப்படுகிறதா என்பதைக் குறித்து ஒன்டாரியோ மக்களுக்கு அத்தியாவசிய தகவல்களை வழங்குவதற்காகவே இருக்கின்றன,” என்று கோஸ்ஸெய்ம் ஒரு அறிக்கையில் எழுதியுள்ளார்.

அமைச்சரவை விவாதங்கள் அல்லது அரசுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளை வெளிப்படுத்தக்கூடிய பதிவுகள் தற்போதைய சட்டத்தின் கீழேயே ஏற்கனவே விலக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

thaya

பாரதூரமான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மௌனம் காப்பது ஏன்

March 14, 2026

சபாநாயகர் மற்றும் அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

no

வடமராட்சி புலோலியில் போதை ஒழிப்பு நடவடிக்கைக்கென குழு அமைப்பு

March 14, 2026

ஜனாதிபதியின் முழு நாடுமே ஒன்றாக எனும் தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் விஷ போதைப்பொருளை தடுப்பதற்கான கிராம மட்ட குழு

mano

தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவது ஏன்?

March 14, 2026

போரை முன்னெடுத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த முடிந்ததென்றால், தமிழ் மக்களின் ஆதரவைப்

net

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் பணிநீக்கம்?

March 14, 2026

உலகளவில் பிரபலமான ஓடிடி தளங்களில் ஒன்றான Netflix தனது சில பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை

thes

மட்டக்களப்பில் பெண்களின் பாரிய கவனயீர்ப்புப் பேரணி!  

March 14, 2026

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவினை செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்யெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் பெண்களின் உரிமையினை வலியுறுத்தியும் மட்டக்களப்பு கவன ஈர்ப்பு

th

பௌத்த உறவை வலுப்படுத்தும் நோக்கில் 108 புத்தர் சிலைகள் அன்பளிப்பு!  

March 14, 2026

இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையிலான பௌத்த மத உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில், 108 ‘Phra Phuttha Metta’ சிலைகளை

ont

நவீனப்படுத்தப்படுகின்றது ஒன்டாரியோ மாகாண தகவல் அறியும் உரிமைச் சட்டம்?

March 14, 2026

ஒன்டாரியோ மாகாண அரசு, தகவல் அறியும் உரிமை (FOI) சட்டத்தை “நவீனப்படுத்தும்” பெயரில் மாற்ற முன்வந்துள்ளது. இந்த மாற்றம் நடைமுறைக்கு

55

கனடா – அல்பர்டா ஆசிரியர்கள் “பணிக்கு திரும்பச் செல்லும்” சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த கோரிக்கை நிராகரிப்பு

March 14, 2026

டந்த ஆண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அல்பர்டா பள்ளி ஆசிரியர்களை மீண்டும் பணிக்கு திரும்பச் செய்யத் திணித்த மாகாண சட்டத்தை

ano

உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக மத்திய கிழக்குச் சூழ்நிலை மாறியுள்ளது!

March 14, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் அனைத்து தரப்பினரும் பதற்றத்தை

mett

தொழில்நுட்ப மாற்றங்களால் மெட்டாவில் 20 வீத ஊழியர்கள் வேலை இழக்க வாய்ப்பு?

March 14, 2026

சமீபத்தில் வெளிவரும் தகவல்களுக்கு ஏற்ப, உலகப் பிரபல சமூக ஊடக நிறுவனமான Meta தனது மொத்தப் பணியாளர்களில் சுமார் 20

nor

வடகொரியா – ஜப்பான் கடலுக்கு வெளியே ஏவுகணை சோதனை!

March 14, 2026

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் 11 நாட்கள் நடைபெறும் ‘ப்ரீ டம் ஷீல்ட்’ என்ற கூட்டு இராணுவ பயிற்சியை தொடங்கிய

med

“தேசிய ஊடகக் கொள்கையின்” மேம்படுத்தப்பட்ட வரைவினை அமைச்சர் மற்றும் பிரதியமைச்சரிடம் கையளிப்பு

March 14, 2026

நீண்டகால மற்றும் விரிவான ஆலோசனைச் செயல்முறையின் பின்னர் தயாரிக்கப்பட்ட “இலங்கையின் தேசிய ஊடகக் கொள்கையின்” மேம்படுத்தப்பட்ட வரைவானது, (Advanced Draft)