தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக சோண்டர்ஸ்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடத்தப்பட்டுவரும் சம்பியன்ஸ் லீக் 2025-26 கால்பந்தாட்டத்தின் முதல் சுற்றில் ஏ குழுவில் சோண்டர்ஸ் கழகம் தோல்வி அடையாத ஒரே ஒரு அணி என்ற பதத்தைத் தக்கவைத்துக்கொண்டது.

செரெண்டிப் கழகத்திற்கும் சோண்டர்ஸ் கழகத்திற்கும் இடையில் சனிக்கிழமை (24) மாலை நடைபெற்ற போட்டி 3 – 3 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

போட்டியின் 8ஆவது நிமிடத்தில் ப்ரிம்பொங் யாவ் சுமார் 20 யார் தூரத்தில் இருந்து பலமாக உதைத்த பந்து கோலினுள் புக செரெண்டிப் கழகம் 1 – 0 என முன்னிலை அடைந்தது.

அதன் பின்னர் மத்திய கள வீரர் மொஹமத் ரஹுமான் இடதுபுறமாக பந்தை நகர்த்திச் சென்று சற்று கடினமான கோணத்திலிருந்து சிறப்பான கோல் ஒன்றை போட 17ஆவது நிமிடத்தில் செரெண்டிப் கழகம் தனது கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கிக்கொண்டது.

தொடர்ந்து விறுவிறுப்பையும் பரபரப்பையும் ஏற்டுத்திய இப் போட்டியின் இடைவேளையின்போது செரெண்டிப் கழகம் 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.

இதன் காரணமாக சோண்டர்ஸ் கழகத்தின் தோல்வி அடையாத அணி என்ற பதம் அற்றுப் போய்விடும் என்ற நிலை உருவானது.

ஆனால், இடைவேளைக்குப் பின்னர் எதிர்நீச்சல் போட்டு விளையாடிய சோண்டர்ஸ் கழகம் 2 கோல்களைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தியது.

போட்டியின் 52ஆவது நிமிடத்தில் செரெண்டிப் வீரர் ரொஜர் பிலிப்பே பரிமாறிய பந்தை குளோவிஸ் ப்ரான்க் கோலாக்கினார்.

போட்டியின் 70ஆவது நிமிடத்தில் வலப்புறமாக பந்தை நகர்த்திச் சென்ற சோண்டர்ஸ் கழகத்தின் இளம் வீரர் பெத்தும் கிம்ஹானவை தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து செரெண்டிப் பின்கள வீரர் ஒருவர் முரணான வகையில் வீழ்த்தியதால் சோண்டர்ஸ் கழகத்திற்கு பெனல்டி வழங்கப்பட்டது.

அந்த பெனல்டியை ரொஜர் பிலிப்பே கோலாக்கி கோல் நிலையை சமப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் வெற்றி கோலுக்காக கடுமையாக முயற்சித்தன.

போட்டியின் 81ஆவது நிமிடத்தில் விஜயகுமார் அபிஷான் சாமர்த்தியமாக பந்தை கோலினுள் புகுத்தி செரெண்டிப் கழகத்தை மீண்டும் முன்னிலையில் இட்டார்.

போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது டார்க்கோ ஜோர்ஜ் அநாவசியமாக மத்தியஸ்தர் ஏ.எம். ஜப்ரானின் இரண்டாவது மஞ்சள் அட்டைக்கு இலக்காகி சிவப்பு அட்டையுடன் மைதானத்தைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

எனினும், துவண்டுவிடாமல் விளையாடிய சோண்டர்ஸ் கழகம் உபதையீடு நேரத்தில் (90 + 4 நி.) பெத்தும் கிம்ஹான் மூலம் கோல் நிலையை சமப்படுத்தி தோல்வி அடையாத அணி என்ற பதத்தைத் தக்கவைத்துக்கொண்டது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்