சமீபத்தில் வெளிவரும் தகவல்களுக்கு ஏற்ப, உலகப் பிரபல சமூக ஊடக நிறுவனமான Meta தனது மொத்தப் பணியாளர்களில் சுமார் 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டோரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களில் சுமார் 600 பில்லியன் டொலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பெரிய செலவினத்தை சமாளிக்க, மெட்டா நிறுவனத்திற்கு செலவுகளை குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
முந்தைய காலங்களில் ‘Metaverse’ திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மெட்டா, தற்போது முழு கவனத்தை AI, ஸ்மார்ட் கிளாஸ் (Wearables) மற்றும் வேறு முன்னோடியான தொழில்நுட்பங்களுக்கு மாற்றியுள்ளது.
தகவல்களின்படி, இந்த ஊழியர் பணிநீக்கம் மெட்டாவின் அனைத்து பிரிவுகளையும் பாதிக்கக்கூடும். குறிப்பாக, இலாபமின்றி இயங்கும் அல்லது பழைய ‘மெட்டாவர்ஸ்’ திட்டங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அதிக பாதிப்பை எதிர்கொள்ளலாம்.
ஏற்கனவே 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ‘Reality Labs’ பிரிவில் சுமார் 10 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மெட்டாவின் ஸ்தாபகர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளதாவது, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிறுவன உள்நாட்டு பணிகளை வேகப்படுத்தி, குறைந்த ஊழியர்களுடன் அதிக வேலைகளைச் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
மெட்டா நிறுவனத்தின் முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் புதிய முன்னேற்றங்களையும், வேகமான மாற்றங்களையும் ஏற்படுத்தப்போகின்றன என்பதில் சந்தேகம் இல்லை.