பணமோசடிக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் ஒரு தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 (1) (b) இன் கீழ் பணமோசடி குற்றத்திற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, சந்தேக நபர் தனக்கு சட்டப்பூர்வமாக வர வேண்டியிராத 30 மில்லியன் ரூபாயை, சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து பெறப்பட்ட நிதியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையாண்டு, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மாற்றுவதன் மூலம் தெரிந்தே மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரான ஜி.எம். நிஹால் சிசிர குமார, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பெப்ரவரி 10, ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.