தெற்கில் தமிழர் விரோத அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செய்யமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது. தேசிய மக்கள் சக்தி இலங்கை மக்களுக்கான கட்சியாகும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ஊடாக 984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குற்காட்டுவான் இறங்குதுறை புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 2027 ஒக்டோபர் 26ஆம் திதிக்குள் முழுமையாக நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக குற்காட்டுவான் இறங்குதுறை இணைக்கும் வீதி பணிக்கும் நிறைவு பெரும் நிலையில் உள்ளன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்மேலும் தெரிவித்தாவது:-
நெடுந்தீவில் 1,400 குடும்பங்கள் வாழ்கின்றன. கற்று வாக்குறை மற்றும் மீன்பிடித்துறைக்கு இங்கு நிறைய இடம் உள்ளது. எனவே, அப்பகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டியது கட்டாயத் தேவையாகும்.
போக்குவரத்து பிரச்சனைதான் இப்பகுதிக்கு பெரும் பிரச்சனையாகும். இதனால் பாடசாலைகளுக்கு உரிய நேரத்துக்கு ஆரம்பிக்க முடியாத குறுநிலை உள்ளது. முடப்படுகின்றன.
நெடுந்தீவுஇலங்கைப் படத்தில் இருந்தாலும் இலங்கையின் எனைய பகுதிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் இங்கு கிடைக்கவில்லை. போக்குவரத்து பிரச்சனையே நெடுந்தேவின் கழுத்தை நெரித்துள்ளது