திறைச்சேரிக்கு சொந்தமான அரச நிறுவனங்களிடமே மின்சார சபை பொறுப்புகள்

மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை. திறைச்சேரிக்கு சொந்தமான அரச நிறுவனங்களிடமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது மின்சாரசபையின் சேவையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.மின்சாரத்துறையை வினைத்திறனாக்குவதற்காக கட்டமைப்பில் மாத்திரமே மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.

இலங்கை மின்சாரசபை மறுசீரமைக்கப்பட்டமை தொடர்பில் திங்கட்கிழமை (9) விசேட அறிவிப்பை விடுத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் பணிகள் நேற்றுடன் வெற்றிகரமாக முடிவடைந்தது.நூற்றுக்கு நூறு சதவீதம் அரசுக்கு சொந்தமான பங்குகளைக் கொண்டுள்ள நான்கு அரச நிறுவனங்களிடமும், இரண்டு இணை நிறுவனங்களிடமும் மின்சார சபையின் விடயதானங்கள் பொறுப்பாக்கப்பட்டுள்ளன.

மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது மின்சாரசபையின் சேவையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.பல்வேறு காரணிகளின் நிமித்தம் சுய விருப்பத்தின் அடிப்படையில் சேவையில் இருந்து ஓய்வுப்பெறும் தீர்மானத்தை அறிவித்தவர்களுக்கு சேவை காலத்தை அடிப்படையாகக் கொண்டு போதுமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கம் மின்சாரசபையை 12 கூறுகளாக பிரித்து, 12 ஆயிரம் பேரை சேவையில் இருந்து நீக்குவதற்கு தீர்மானித்து அதற்குரிய வகையில் சட்டத்தையும் இயற்றியது. இந்த சட்டத்தை திருத்தம் செய்து புதிய உள்ளடக்கங்களுடன் மின்சாரசபை மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையின் உரித்தை முழுமையாக அரச நிறுவனம் ஊடாக பாதுகாத்துக்கொண்டு இந்த மறுசீரமைப்பு பணியை நிறைவு செய்துள்ளோம் என்பதை வெளிப்படையாக குறிப்பிட முடியும். மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை. திறைச்சேரிக்கு சொந்தமான அரச நிறுவனங்களிடமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள் குறித்து கடந்த ஒரு ஆண்டுகாலமாக சகல தரப்புடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். சுமார் 42 மின்சார தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி அவர்களின் யோசனைகளை மறுசீரமைப்புக்குள் உள்ளடக்கியுள்ளோம்.

நட்டத்தில் இயங்கும் மின்சாரசபையை மறுசீரமைத்து அதன் உச்சபயனை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும். மின்சாரத்துறை வினைத்திறனான வகையில் பொதுமக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மறுசீரமைப்பினால் மின்சாரசபையின் சேவையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. புதிய நிறுவன கட்டமைப்புக்குள் இவர்கள் சேவைக்குள் உள்வாங்கப்படுவார்கள்.கட்டமைப்பில் மாத்திரமே மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

puputhu

ஆகஸ்ட் மாதம் முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

March 9, 2026

நாட்டில் கடந்த பத்து நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் எதுவும் வருகை தராத காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல்

ni

புதிய தவிசாளராக றியாஸ் ஆதம் தெரிவு!

March 9, 2026

நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை

en

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி விபத்தில் உயிரிழப்பு

March 9, 2026

இன்று (09) மாலை வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு

fire

கடும் வறட்சி; பற்றி எரியும் காடு

March 9, 2026

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலையைத் தொடர்ந்து, ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் அளுத்கம பகுதியில் நேற்று

ha

“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” – பிரதமர்

March 9, 2026

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் சட்டப் புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், அவை ஒவ்வொரு பெண்ணும் நிஜ வாழ்க்கையில்

arrest

பல  காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது 

March 9, 2026

ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப்

wil

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

March 9, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை

keri

கேரி கிர்ஸ்டன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம்

March 9, 2026

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன்

thekk

வன்னியில் தேக்குமரக் குற்றிகளை கடத்திய சாரதி கைது

March 9, 2026

வன்னி பகுதியில் இருந்து தேக்குமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த லொறி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் புத்தூர் சந்தி பகுதியில்

pu

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

March 9, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு

sa vas

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

March 9, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை

ta

தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயம்

March 9, 2026

பத்தேகமவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று (9) மதியம் தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பத்தேகம