தி.மு.க.வுக்கு காங்கிரஸ் நிபந்தனை!

‘ஆட்சியில் பங்கு தர வேண்டும்; இல்லையெனில், 5 ராஜ்யசபா எம்.பி. பதவி தர வேண்டும்’ என்று காங்கிரஸ் மேலிடம் விதித்துள்ள நிபந்தனையால் தி.மு.க. தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி, லோக்சபாவில் பெரும்பான்மை பெறாவிட்டாலும், ராஜ்யசபாவில் அதிக எம்.பி.க்கள் உள்ள கட்சியாக இருந்தது. இதனால், பார்லிமென்டில் மத்திய அரசுக்கு சுலபமாக இடைஞ்சல் உண்டாக்க முடிந்தது.

ஆனால், இப்போது கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே, காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

இதனால் 245 எம்.பி.க்களை கொண்ட ராஜ்யசபாவில், காங்கிரசுக்கு 27 பேர்தான் உள்ளனர். அதை அதிகரிக்க, பல்வேறு வியூகங்களை காங்கிரஸ் வகுத்து வருகிறது.

நீண்டகாலமாக, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வென்று தான், தி.மு.க. ஆட்சி அமைத்தது. 2006ல் தி.மு.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காமல், காங்கிரசின் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன்தான், தி.மு.க. ஆட்சி அமைத்தது. ஆனால் காங்கிரசுக்கு அமைச்சரவையில் பங்கு தரவில்லை.

அடுத்த ஆண்டு தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு தராது என காங்கிரசுக்கு தெரியும். இதனால், ‘லோக்சபா தேர்தலில், நான்கில் ஒரு பங்கு தொகுதியை, அதாவது 39க்கு 9 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கினீர்கள்.

அதுபோல, ராஜ்யசபாவிலும் நான்கில் ஒரு பங்கு, அதாவது 18க்கு நான்கு அல்லது ஐந்து தொகுதிகளை தர வேண்டும்’ என, நிபந்தனை விதித்துள்ளது.

இதனால், அதிர்ச்சி அடைந்த தி.மு.க. மேலிடம், அது சாத்தியமில்லை என்று கூறியுள்ளது. ஆனாலும், காங்கிரஸ் விடுவதாக இல்லை. தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், ஒரு பக்கம் த.வெ.க.வுடனும் பேச்சு நடத்த துவங்கியுள்ளது.

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

December 8, 2025

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.வடக்கு ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ளது அமோரி

chand

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

December 8, 2025

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர்

Judment

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் போலி சட்டத்தரணி?

December 8, 2025

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

old

யாழ்.பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம்

December 8, 2025

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும்

chinm

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு விளைவிக்கிறார் சின்மயி!

December 8, 2025

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு

chira

சிரஞ்சீவி – நயன்தாரா இணைவு

December 8, 2025

நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்துள்ள புதிய படத்தில் இருந்து சசிரேகா எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியின்

chami_1

பெண் விமானியின் கோரிக்கை; தந்தை வழித்தன்மையை உறுதிப்படுத்த கிரிக்கெட் வீரர் மறுப்பு

December 8, 2025

தனது குழந்தையின் தந்தைவழித்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ அறிக்கையைப் பெற நீதிமன்ற உத்தரவைக் கோரிய பெண் விமானியின் கோரிக்கைக்கு கிரிக்கெட் வீரர்

nori

பிரித்தானியாவின் நொரிஸ் முதற் தடவையாக சம்பியனானார்

December 8, 2025

முதற் தடவையாக மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் போர்மியுலா வண் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அபு தாபி குரான்

sel

செல்டா விகோவிடம் தோற்ற றியல் மட்ரிட்

December 8, 2025

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியில் 0-2 என்ற

chi

மனித நுகர்வுக்கு பொருந்தாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்

December 8, 2025

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல

water fal

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன?

December 8, 2025

நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் துறையின் அளவீட்டு

nuw

டித்வா சூறாவளியால் விவசாயத் துறைச் சேதம்; ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

December 8, 2025

டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வதற்கும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர