தமிழால் இணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்களை உங்கள் Behind Me ஊடக வலையமைப்பு தெரிவித்துக் கொள்கின்றது.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் இந்த நன்னாளில், இயற்கையையும், உலகுக்கு ஒளியூட்டும் சூரிய பகவானையும் போற்றுவதன் பின்னணியில் உள்ள ஆன்மீகம் மற்றும் அறிவியல் காரணங்கள் எமக்கு மிக அவசியம்.
மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே நதிக்கரை நாகரிகங்கள் அனைத்தும் இயற்கையை இறைவனின் கொடையாகவே கருதி வந்துள்ளன. குறிப்பாக, பயிர் விளைச்சலுக்கு ஆதாரமாக விளங்கும் சூரியனை வழிபடுவது உலகளாவிய மரபாகும். சைவ ஆகமங்கள் சூரியனை ‘சிவசூரியன்’ என்றும், வைணவ மரபு ‘சூரிய நாராயணன்’ என்றும் போற்றுகின்றன. சூரிய மண்டலத்தின் மையத்திலிருந்து நாராயணனே செயலாற்றுவதாகப் பக்தி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
பொங்கலில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் சூரியன், காலத்தைக் கணிப்பதற்கும் உலகின் இயக்கத்திற்கும் ஆதாரமாக இருக்கிறார். மேகங்களை உருவாக்கி மழையைத் தரவும், பயிர்கள் வளரத் தேவையான சக்தியை அளிக்கவும் கதிரவனே காரணமாகிறார். எனவே, விளைச்சலின் முதல் பகுதியை அவருக்குப் படைப்பது நன்றியறிதலின் உச்சமாகும்.
சூரிய கதிர்கள் உடலில் படும்போது வைட்டமின்-டி கிடைப்பதுடன், மன அழுத்தம் நீங்கி ஆரோக்கியம் மேம்படும் என்பது அறிவியல் உண்மை.
வீட்டைத் தூய்மைப்படுத்தி, வண்ணக் கோலமிட்டு, புதுப்பானையில் புத்தரிசி இட்டு பொங்கலிடுவது நம் மரபுமரபு. மாதம் பிறப்பின் முதல் நாளில் புத்தாடைகள் அணிந்து மண் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைக்க வேண்டும். கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து மற்றும் பருவகாலப் பழங்களைச் சூரியன் தெரியும் திசையை நோக்கி வைத்து வழிபட வேண்டும். பானையில் பால் பொங்கி வரும்போது “பொங்கலோ பொங்கல்” என்று முழக்கமிட்டு, வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கப் பிரார்த்திக்க வேண்டும்.
இன்றைய நவீன நகரமயமான சூழலிலும், சூரியன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்ற உண்மையை உணர்ந்து, இந்தத் தைத்திருநாளில் இயற்கையைப் போற்றிப் பாதுகாப்போம்.