டொரோண்டோவைத் தலைமையிடமாகக் கொண்ட மருந்து நிறுவனத்தின் புது முயற்சி!

புதியதாக உருவாக்கப்பட்ட ஒரு கனேடிய மருந்து நிறுவனம், உலகில் மிகவும் பரவலாக அறியப்பட்ட மருந்துகளில் ஒன்றான ஓசெம்பிக்(Ozempic)இற்கு ஜெனெரிக் (generic) தயாரிப்பைக் கொண்டு வந்து சந்தையில் இடம்பிடிக்க முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

“இந்த ஒரே மருந்தில் நாங்கள் எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம் என்று சொல்லலாம்” என்று டொரோண்டோவைத் தலைமையிடமாகக் கொண்ட Vimy Pharma நிறுவனத்தின் இணை நிறுவனர் David Suchon கூறியுள்ளார்.

உடல் எடை குறைக்கும் மருந்துகளான Ozempic மற்றும் Wegovy ஆகியவற்றின் செயலில் உள்ள மூலப்பொருளான semaglutide-க்கு இருந்த தரவு பாதுகாப்பு (data protection) ஜனவரி மாதத்தில் காலாவதியானது என்று கனேடிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதனால் toikahd மருந்துகளைவிட மலிவான ஜெனெரிக் மருந்துகள் சந்தையில் வருவதற்கான வாய்ப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் ஏற்பட்டுவரும் வரி மாற்றங்களால் கனடாவில் தேசப்பற்று அதிகரித்துள்ள சூழலில், 2024-ல் நிறுவப்பட்ட Vimy Pharma, கனடாவில் கனடியர்களுக்காக மலிவான விலையில் மருந்தை தயாரிப்பதன் மூலம் அந்த தேசப்பற்று உணர்வை பயன்படுத்த விரும்புகிறது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

“உள்ளூர் பிராண்டுகள் மற்றும் நிறுவனங்களை ஆதரிக்க நாடு முழுவதும் மக்கள் ஆர்வமும் ஆதரவும் அதிகரித்து வருகிறது,” என்று Farris Smith, Vimy Pharma நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் கூறினார். அவர் மற்றும் Suchon இருவரும் முன்பு Novo Nordisk நிறுவனத்தில் நிர்வாகிகளாக பணியாற்றியவர்கள். அந்த டேனிஷ் நிறுவனம் தான் Ozempic மருந்தை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Ozempic கனடாவில் நீரிழிவு நோய்க்கு (diabetes) சிகிச்சையாகவும், சிறுநீரக செயலிழப்பு வேகத்தை குறைக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உடல் எடை குறைக்கவும் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கனடியர்கள் Ozempic-ன் மலிவான தயாரிப்பைப் பெறக்கூடும் எனவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

puputhu

ஆகஸ்ட் மாதம் முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

March 9, 2026

நாட்டில் கடந்த பத்து நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் எதுவும் வருகை தராத காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல்

ni

புதிய தவிசாளராக றியாஸ் ஆதம் தெரிவு!

March 9, 2026

நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை

en

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி விபத்தில் உயிரிழப்பு

March 9, 2026

இன்று (09) மாலை வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு

fire

கடும் வறட்சி; பற்றி எரியும் காடு

March 9, 2026

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலையைத் தொடர்ந்து, ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் அளுத்கம பகுதியில் நேற்று

ha

“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” – பிரதமர்

March 9, 2026

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் சட்டப் புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், அவை ஒவ்வொரு பெண்ணும் நிஜ வாழ்க்கையில்

arrest

பல  காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது 

March 9, 2026

ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப்

wil

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

March 9, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை

keri

கேரி கிர்ஸ்டன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம்

March 9, 2026

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன்

thekk

வன்னியில் தேக்குமரக் குற்றிகளை கடத்திய சாரதி கைது

March 9, 2026

வன்னி பகுதியில் இருந்து தேக்குமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த லொறி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் புத்தூர் சந்தி பகுதியில்

pu

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

March 9, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு

sa vas

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

March 9, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை

ta

தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயம்

March 9, 2026

பத்தேகமவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று (9) மதியம் தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பத்தேகம