சேதமடைந்த புகையிரத வீதிகளைப் புனரமைப்பதற்கு 400 மில்லியன்

மண்சரிவு மற்றும் வெள்ளம் என்பவற்றால் சேதமடைந்த புகையிரத வீதிகளை புனரமைப்பதற்கு 400 மில்லியன் டொலர் செலவாகக் கூடும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான 293 வீதிகள் அனர்த்தங்களால் உபயோகிக்க முடியாத வகையில் சேதமடைந்தன. எனினும் தற்போது அவற்றில் 292 வீதிகள் புனரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை சுமார் 40 பாலங்களும் சேதமடைந்தன. அவற்றில் 20 பாலங்கள் புனரமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. எனினும் அவை தற்காலிக புனரமைப்புக்களுக்கே உட்படுத்தப்பட்டுள்ளன.

40 பாலங்களையும் முழுமையான பயன்பாட்டுக்கு உட்படுத்தக் கூடியவாறு புனரைமைப்பதற்கு சற்று காலம் செல்லும். அதற்கான நடவடிக்கைகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பாலங்களைப் புனரமைப்பதற்காக வெளிநாடுகளிடமிருந்து நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று சேதமடைந்தவற்றில் பல புகையிரத வீதிகள் புனரமைக்கப்பட்டு அவற்றில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. எனினும் யாழ்ப்பாணத்துக்கான புகையிரத வீதியில் புகையிரத போக்குவரத்துக்கள் நாத்தாண்டியா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய மலைநாட்டுக்கான புகையிரத போக்குவரத்துக்கள் பொல்கஹாவெல வரை முன்னெடுக்கப்படுகின்றன.

புகையிரத வீதிகள் புனரமைக்கப்பட்டு வழமைக்கு திரும்புவதற்கும் குறிப்பிட்டளவு காலம் செல்லும். இதற்கு சுமார் 400 மில்லியன் டொலர் செலவாகும் என புகையிரத திணைக்களம் மதிப்பிட்டுள்ளது என்றார்.

thad

மொன்றியல் புறநகர்ப் பகுதியில் புதியவகை தட்டம்மை நோய் பரவல்…

December 16, 2025

மொன்றியலுக்கு வெளியே உள்ள செயிண்ட்-யுஸ்டாச் (Saint-Eustache) புறநகர்ப் பகுதியில், ஒரு புதியவகை தட்டம்மை (Measles) நோய்ப் பரவலை, கியூபெக் பொதுச்

qu

பள்ளிகளில் நிலவும் வன்முறை நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு கியூபெக்கின் ஆசிரியர் தொழிற்சங்கம் அறிவிப்பு

December 16, 2025

கியூபெக் மாநிலப் பள்ளிகளில் நிலவும் வன்முறை நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு, கியூபெக்கின் ஆசிரியர்கள் தொழிற்சங்கம் (Fédération autonome de

mahes sena

சஜித் பிரேமதாஸவின் நிவாரணப் பணிகளுக்கு அவதூறு செய்து அரசியல் இலாபம் தேடுவதை நிறுத்துங்கள் – ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்

December 16, 2025

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை வைத்தியசாலைக்கு ரூ. 29 இலட்சம் பெறுமதியான உபகரணங்களை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

inthi

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் – முன்னாள் அமைச்சர் இந்திக்க அநுருத்த

December 16, 2025

வெள்ளம் மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால், வெகு விரைவில் மக்கள் கிளர்ச்சி

pre

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூபாய் 5,000 போஷாக்குக் கொடுப்பனவு

December 16, 2025

சவால்களுக்கு மத்தியிலும், தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காக அரசாங்கம் முதலீடு செய்யும் என்ற உறுதியுடன், டிசம்பர் மாதத்திற்கான கர்ப்பிணித் தாய்மார்களுக்கான

au

 ஆஸ்திரேலிய தாக்குதல்; பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும் மகனும் குற்றவாளிகள்!

December 16, 2025

ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 16 ஆக அதிகரித்துள்ளது. யூதர்களுக்கு எதிரான இந்தத்

manda

ஊர்காவற்றுறை நீதிமன்றில் மண்டைதீவு புதைகுழி வழக்கு

December 16, 2025

மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கை இன்று (16.12.2025) ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்

weat

மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

December 16, 2025

கிழக்கிலிருந்து அடித்த ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும்

ti

டிக்டோக் நட்பு: இளம் பெண் கூட்டு வன்முறை: திருமலையில் சம்பவம்

December 16, 2025

திருகோணமலையில் சமூக ஊடகமான டிக்டோக் மூலம் அடையாளம் காணப்பட்ட 24 வயது திருமணமான பெண்ணை கூட்டு பாலியல் ரீதியான துன்புறுத்தலில்

abu

சூறாவளிக்குப் பிறகு குழந்தைகளை கடத்தல், சுரண்டல் அதிகரிப்பு

December 16, 2025

டித்வா சூறாவளிக்குப் பிறகு, குழந்தைகள் கடத்தல் மற்றும் சுரண்டலுக்கான சில கூறுகளின் முயற்சிகள் அதிகரித்து வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள்

arrest

ஐரோப்பா செல்ல முயன்ற இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

December 16, 2025

போலி ஆவணங்களுடன் ஐரோப்பா செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஓமான்

mex

சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி 7 பேர் பலி

December 16, 2025

மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் ஏழு பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய