செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி – கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றச்சாட்டு!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான அகழ்வாராய்ச்சி மற்றும் விசாரணைகளை திசை திருப்ப முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே விடுதலைப்புலிகளை மலினப்படுத்துவதற்காக கிழக்கில் குருக்கள் மடத்தில் ஒரு மனிதப் புதைகுழி இருப்பதாக கூறி செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கடந்த கால ஆட்சியாளர்களினால் போதைப்பொருள் வர்த்தகம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் எடுத்த தீவிரமான நடவடிக்கைகளினால், கைதுகளினால் ஆரம்பத்தில் போதைப்பொருள் வர்த்தகம் குறைவடைந்திருந்தபோதும் தற்போது அது மீண்டும் தலைவிரித்தாடுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்தான் போதைப்பொருள் வர்த்தகம் அதிகளவில் நடக்கின்றது. யுத்தத்திற்கு முன்னர் விடுதலைப்புலிகளின் காலத்தில் வடக்கு, கிழக்கில் போதைப் பொருள் என்பது மிக மிக அரிது. எனெனில் விடுதலைப்புலிகளிடம் மிகக் கட்டுக்கோப்பான நிர்வாகம் இருந்தது.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்குஇகிழக்கில் அதிகளவில் போதைப் பொருள் வர்த்தகத்தை இராணுவத்தினரும் இராணுவத்தினரோடு சேர்ந்து செயற்படுகின்றவர்களும் பேரினவாத குழு அரசியலோடு சேர்ந்து செயற்படுகின்றவர்களுமே தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு தமிழர்களின் கலாசாரத்தை,பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பதற்காக, தமிழரின் இருப்பை கேள்விக்குறியாக்க வேண்டும் என்பதற்காக சீரழிக்க வேண்டும் என்பதற்காக போதைப்பொருள் வர்த்தகம் திட்டமிடப்பட்ட முறையில் வடக்கு,கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.

தற்போதைய ஆட்சி இதனை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.தற்போது கூட வடக்குஇகிழக்கில் மாணவர்களிடையில், அவர்களை முக்கிய இலக்காகக் கொண்டு இந்த போதைப் பொருள் வர்த்தகம் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.ஒவ்வொரு பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு இந்த போதைப் பொருள் வர்த்தகர்கள் போதைப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

செம்மணி மனிதப்புதை குழியில் இது வரை 412 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தமிழினப் படுகொலை நடந்ததற்கான முக்கிய சாட்சியாகவுள்ளது.செம்மணி மட்டுமல்ல வடக்குஇகிழக்கில் திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட பெண்கள்,குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் பல மனிதப் புதைகுழிகள் உள்ளன.

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான அகழ்வாராய்ச்சிக்கு இந்த அரசாங்கம் நிதியை ஒதுக்குகின்றது.செம்மணி விடயத்தில் அரசாங்கத்தின் நிதி மட்டும் போதாது நீதியும் வேண்டும். இந்தப் படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்களை கண்டறிய வேண்டுமானால் அதற்கு சர்வதேச பொறிமுறையே வேண்டும்.

இந்தப்படுகொலைகளுக்கு இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச என்பவர் சாட்சியாகவுள்ளார்.இந்தப்படுகொலையுடன் இராணுவ அதிகாரிகள், இராணுவ வீரர்கள் தொடர்புபட்டுள்ளதால் உள்ளூர் விசாரணை மூலம் உண்மைகள் வெளிவராது. எனவேதான் சர்வதே பொறிமுறையுடனான விசாரணை அவசியமாகவுள்ளது

இது ஒரு அப்பட்டமான தமிழினப்படுகொலை.இவ்வாறான தமிழினப்படுகொலைகள் வடக்கு, கிழக்கில் பல இடங்களில் நடந்துள்ளன. செம்மணி மனிதப்புதக்குழி தொடர்பான அகழ்வாராய்ச்சிஇ விசாரணைகளை திசை திருப்ப முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே விடுதலைப்புலிகளை மலினப்படுத்துவதற்காக கிழக்கில் குருக்கள் மடத்தில் ஒரு மனிதப் புதைகுழி இருப்பதாக கூறி செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயன்றார்கள். வடக்கு மற்றும் கிழக்கில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான நீதி விசாரணை வேண்டுமென்றே நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.

1

“சென்னையில் 750 புதிய மின்சார பஸ்கள்!” – முதலமைச்சர் விஜய் நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்!

August 24, 2026

சென்னை சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், 2-ஆம் கட்டமாக 750 புதிய தாழ்தளக் குளிர்சாதன மின்சாரப் பஸ்கள் (AC

keerthana-xy-2026-08-23-14-35-56

“ரூ.4 கோடிக்கு வீடா? பத்திரத்தைக் காட்டுங்கள், அந்த வீட்டை உங்களுக்கே பரிசாகத் தருகிறேன்!” – அமைச்சர் கீர்த்தனா அதிரடி சவால்!

August 24, 2026

சிவகாசி சிவகாசியில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தான் ரூ.4 கோடிக்கு வீடு

dailythanthi_import_h-upload_2026_01_20_44548124-tcpgc

“100 நாள் ஆட்சியில் மக்களின் எண்ணங்களை த.வெ.க. அரசு பிரதிபலித்துள்ளது!” – ஜி.கே.வாசன் பாராட்டும் கோரிக்கையும்!

August 24, 2026

சென்னை முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் 100 நாள் செயல்பாடுகள் மற்றும் சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் பொறுப்புணர்வுகள் குறித்துத் தமிழ்

collage-down-31481787545581

“பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து!” – அரசியல் கட்சிகளின் ஆதரவும், பாஜகவின் அடுக்கடுக்கான கேள்விகளும்!

August 24, 2026

சென்னை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாகச் சட்டமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில், இந்த முடிவுக்கு

proceedings

பேரவை அனுமதிக்கும் முன் அறிவிப்புகளை வெளியிடக் கூடாது – சபாநாயகர் அதிரடி உத்தரவு!

August 24, 2026

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

hindutamil-prod_2026-08-24_22cnkohu_Untitled

“கொளத்தூர் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்!” – தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தேர்தல் வழக்கு!

August 24, 2026

ன்னை சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக தலைவரும் முன்னாள்

Tamil_News_lrg_4303741

“முதல்வர் குறித்து அவதூறு!” – திமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன் மீது சபாநாயகர் நடவடிக்கை!

August 24, 2026

சென்னை முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் குறித்துப் பொதுவெளியில் அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன்

ctr-2025-12-22-14-41-49

“தொகுதிப் பக்கமே போகாத எம்.எல்.ஏ-க்களுக்கு அத்தனை கார் எதற்கு?” – திமுகவைச் சாடிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்!

August 24, 2026

மதுரை மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட முத்தாங்குளம் கிராமத்திற்குப் புதிய பேருந்து வசதியைத் தொடங்கி வைத்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்

1200-675-27217758-thumbnail-16x9-vanni-aspera

“சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க திமுக என்ன செய்தது?” – அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!

August 24, 2026

திண்டிவனத்தில் நடைபெற்ற நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, திமுக மீதான விமர்சனங்கள், உதயநிதி

Parandur-Airport-2026-08-40023cdbed7b28a40fa3190b593f33ac

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து – முக்கிய அறிவிப்புகள்

August 24, 2026

வசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் (விதி 110-ன் கீழ்) முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள

anbumani

“2031-ல் பாமக தலைமையில் உறுதியாக ஆட்சி அமையும்!” – சேலத்தில் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்!

August 24, 2026

சேலம் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும்

dailythanthi_2026-08-24_f2q30ykx_vijayone33

ஆண்டுக்கு 3 சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்; பரந்தூர் விமான நிலையம் ரத்து – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

August 24, 2026

சென்னை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று விதி